(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

கமலே : இவன் கெலிச்சா நீ பணம் குடுக்க வாணாம்.

   

முண் : தோத்தான்னா?

   

கமலே: அப்பவும் குடுக்க வாணாம்.

   

முண்: புத்திசாலிடா நீ என்னே யாருன்னு பாத்துக்கிட்டே!

   

பொறந்தது மொத ஒன்னைப் போலே நான் எம்பிட்டுப் பேரெப் பார்த்தவனாச்சே! நான் அம்புட்டுப் பேரையும் ஏமாத்தரவனாச்சே! அடே ரோக்கிதே இல்லாத பயலே! ஒங்கிட்ட நான் பயப்பட்டவன்?

   

கமலே : ஆர்றா ரோக்கிதே இல்லாதவன்?

   

முண் : நீதாண்டா?

   

கமலே : ஒங்கப்பன், பாட்டன், முப்பாட்டன் இவிங்க தாண்டா ரோக்கித இல்லாதவிங்க. (ஓடிப் போகும்படி கமலேசன் மகிபாலனுக்குச் சைகை காட்டுகிறான்.)

   

முண் : அடே! களுதே! இனிமேலே பேசினின்னா பல்லு கில்லெல்லாம் ஒடஞ்சி போவும். ஆருன்னு பாத்துக்கிட்டே? அடே, மகிபாலா! எங்கிடா பணம்? வைடா கீளே! (இழுக்கிறான்.)

   

மகி : ஐயா! ஐயா! இன்றைக்குள் எப்படியாவது கொடுத்து விடுகிறேன். என்னை ஏன் இப்படிக் கொல்லுகிறாய்? இனி மேல் உபத்திரவித்தால் என் உயிர் போய்விடும்.

   

கமலே : (கோபத்தோடு) அடே தேவிடியா மகனே. அவனேத் தொடாதேங்கிறேன். போட்டு இளுக்கிறீயா? அவன் மேலே இன்னமேக் கை போட்டீன்னா ஒன் முதுகு தோலைப் பேத்துடுவேன். சாக்கிரதே! அடியாத்தே ஆருன்னு ரோசனை பண்ணிக் கிட்டே?

   

(முண்டன் மகிபாலனுடைய மூக்கின் அடிக்க இரத்தம் வடிகிறது. அதைக் கண்ட மகிபாலன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.