என்ன கோலமெனது தேகம் பதைக்குதே!
அன்னாய்! துயர்போது மித்தொடு,
என்ன தேவை வருத்துதோ கூறுவீர். (ஸ்)
அம்மணி! எப்போதும் என்னைப் பரிகாசம் செய்வதைப் போல இப்போது செய்வது தவறு. யாவரிலும் உயர்ந்து ஆகாயத்தில் உலவும் அழகிய சந்திரனுக்குத் தன்னிடத்திலுள்ள களங்கத்தை அறிந்து கொள்ளும் வல்லமை இல்லை. அதை நாமல்லவோ அறிந்து கொள்ளுகிறோம். என்னிடத்தில் சொல் வதில் வெட்கமென்ன? நானும் தங்களைப் போல ஒரு ஸ்திரீ தானே! தாய்க்கு ஒளித்த சூலுண்டோ என்று சொல்லுவார்கள். தங்களை வருத்தும் நோய் இன்னதென்று ஒருவாறு எனக்குத் தெரிகிறது. அதுதானோ? என்று நிச்சயமாய் அறிந்து கொள்ள விரும்புகிறேன். எந்த நோயானாலும் அதை விலக்க மருந்திருக்கிறதே! வியாதியைப் போக்க முயலாமல் ஏன் அனாவசியமாய் அதை அதிகரிக்க விடவேண்டும்? தயவு செய்து தங்களுடைய மனோ வியாதியை வெளிப்படுத்துங்கள். அம்மணி!
வஸ : சில விஷயங்களில் உலகத்தாரின் அபிப்பிராயம் தவறாய்த் தோன்றுகிறது. அவர்கள் எதை நல்லதென்று நினைக் கிறார்களோ அது கெட்டதாக இருக்கிறது; எதைக் கெட்டது என்று மதிக்கிறார்களோ அது நல்லதாக இருக்கிறது.
மல்லி : அப்படியானால் உலகத்தார் யாவரும் மூடர்களோ? எந்த விஷயத்தில் அப்படித் தவறாக அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள்? தெரிவியுங்கள் கேட்கலாம்.
விருத்தம்: கானடா
வஸ:
மங்கையே என்றனாவி மல்லிகா உண்மைத் தோழி!
சங்கையை வதைத்துச் சாலச் சலனமே தரும்பொருட்கள்