சோர்ந்து கீழே விழுகிறான்.)
கமலே : இதோ பாருடா ஒரே ஒதலே ஒன் தலை கிலேல்லாம் எகிரிப் போவுது (முண்டனை அடிக்கப் போகிறான்.)
முண் : வாடா ஒரு கை பார்க்கலாம். ஒம் பொஞ்சாதி புள்ளெங்களுக்கு ஒரு எலும்புகூட இல்லாமெப் பண்ணிப் புட்றேன். (அடிக்கிறான்.)
கமலே : ஆகா! அப்படியா ராசவீதிலே பட்டப் பகல்லே நீ என்னே அடிக்கிறியா? ஒருத்தரும் ஒன்னெக்கேக்றவங்க இல்லேன்னு நெனச்சுட்டியா? இப்பவே ஒங்க பாட்டன் ஒங்கம்மா புருசன் நாயாதபிதி இக்கிறான் பாரு அவன் கிட்டப் போயிச் சொல்லி ஒன்னே எங்கிட்டுப் பாக்கனுமோ அங்கிட்டுப் பார்க்கறேன். பயப்படாதே!
முண் : அடே இந்தப் பூச்சிக்கெல்லாம் இந்த முண்டன் பயந்துடுவான்னு நெனெச்சிக் கிட்டியாடா? கையாலே ஆவாத முண்டே இப்பவே போயி சொல்லிக் கோடா! நானும் ஒன்னெப் பாக்கறேண்டா எனக்கும் சாமி குடுத்த கண்ணு இக்குதுடா!
கமலே : நீயுமா பாக்கப் போறே? அடே எப்புடிடா பாப்பே? அந்த அளவெக் கொஞ்சூண்டு காட்டுறா பார்க்கலாம்.
முண் : இப்படித் தாண்டா பாப்பேன் (முண்டன் தன் கண்களை நன்றாய்த் திறந்து கொண்டு முகத்தை நீட்டுகிறான்.)
கமலே : இந்தா நல்லாப் பாருடா (கமலேசன் ஒரு பிடி மண்ணை எடுத்து முண்டன் கண்களில் போட்டு விடுகிறான். அவன் கண்களை மூடிக்கொண்டு தவிக்கிறான்.)
முண் : அடேடே! கண்ணு போச்சுடா! அடே திண்டா! இங்கிட்டு ஓடியாடோய்! என் கண்ணுலே ஊதுடோய்!
(அந்தச்சமயத்தில் மகிபாலன் எழுந்திருக்கிறான். அவனுக்குக் கமலேசன் சைகை செய்ய, அவன் ஓட்டம் பிடிக்கிறான்.)