(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

சோர்ந்து கீழே விழுகிறான்.)

   

கமலே : இதோ பாருடா ஒரே ஒதலே ஒன் தலை கிலேல்லாம் எகிரிப் போவுது (முண்டனை அடிக்கப் போகிறான்.)

   

முண் : வாடா ஒரு கை பார்க்கலாம். ஒம் பொஞ்சாதி புள்ளெங்களுக்கு ஒரு எலும்புகூட இல்லாமெப் பண்ணிப் புட்றேன். (அடிக்கிறான்.)

   

கமலே : ஆகா! அப்படியா ராசவீதிலே பட்டப் பகல்லே நீ என்னே அடிக்கிறியா? ஒருத்தரும் ஒன்னெக்கேக்றவங்க இல்லேன்னு நெனச்சுட்டியா? இப்பவே ஒங்க பாட்டன் ஒங்கம்மா புருசன் நாயாதபிதி இக்கிறான் பாரு அவன் கிட்டப் போயிச் சொல்லி ஒன்னே எங்கிட்டுப் பாக்கனுமோ அங்கிட்டுப் பார்க்கறேன். பயப்படாதே!

   

முண் : அடே இந்தப் பூச்சிக்கெல்லாம் இந்த முண்டன் பயந்துடுவான்னு நெனெச்சிக் கிட்டியாடா? கையாலே ஆவாத முண்டே இப்பவே போயி சொல்லிக் கோடா! நானும் ஒன்னெப் பாக்கறேண்டா எனக்கும் சாமி குடுத்த கண்ணு இக்குதுடா!

   

கமலே : நீயுமா பாக்கப் போறே? அடே எப்புடிடா பாப்பே? அந்த அளவெக் கொஞ்சூண்டு காட்டுறா பார்க்கலாம்.

   

முண் : இப்படித் தாண்டா பாப்பேன் (முண்டன் தன் கண்களை நன்றாய்த் திறந்து கொண்டு முகத்தை நீட்டுகிறான்.)

   

கமலே : இந்தா நல்லாப் பாருடா (கமலேசன் ஒரு பிடி மண்ணை எடுத்து முண்டன் கண்களில் போட்டு விடுகிறான். அவன் கண்களை மூடிக்கொண்டு தவிக்கிறான்.)

   

முண் : அடேடே! கண்ணு போச்சுடா! அடே திண்டா! இங்கிட்டு ஓடியாடோய்! என் கண்ணுலே ஊதுடோய்!

   

(அந்தச்சமயத்தில் மகிபாலன் எழுந்திருக்கிறான். அவனுக்குக் கமலேசன் சைகை செய்ய, அவன் ஓட்டம் பிடிக்கிறான்.)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.