(Reading time: 29 - 58 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

மகி : (முண்டனைத் தனியாக அழைத்துப் போய்) அடே! ஒரு உபகாரம் செய். என்னிடத்தில் சிறிய நகை ஒன்றிருக்கிறது. அது பாதிக் கடனுக்குத்தான் சரியாகும். அதைக் கொடுக்கிறேன். இன்னொரு பாதிக் கடனை மன்னித்து விடுகிறாயா?

   

முண் : சரி! அப்படியே ஆவட்டும் கொண்டா நவையெ.

   

மகி : (முண்டனைப் பார்த்து உரக்க) நீபாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறது நிச்சயந்தானே?

   

முண் ; நிச்சியந்தான்.

   

மகி : (திண்டனைப் பார்த்து உரக்க) உனக்கும் சம்மதந்தானே! நீயும் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுக்கிறாயா?

   

திண் : சரி.

   

மகி : சந்தோஷம்! இப்படி யார் உதவி செய்யப் போகிறார்கள்! நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவர்கள். இந்த உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன். நான் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன். (போகிறான்.)

   

முண் : எங்கிட்டு வேகமாப் போறே? நில்றா நில்லு.

   

மகி: ஏன் ஐயா! நிற்கச் சொல்லுகிறாய்? நீ பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தாய்; திண்டன் பாதிக் கடனைத் தள்ளிக் கொடுத்தான். கடன் முழுதும் தீர்ந்து போய் விட்டது. நான் போகிறேன். என்னை ஏன் திரும்பவும் வதைக்கிறீர்கள்?

   

முண் : சவாசப்பா! அடே! என்னெ யாருன்னு பாத்துக் கிட்டே; ஒன் சூச்சமெல்லாம் எங்கிட்டச் செல்லாது. எனக்குக் காதா குத்ரே? என் காதைப் பாத்தியா எம்பிட்டுப் பெரிய தொளே மின்னயே குத்தியாச்சுடா பூராப் பணத்தியும் கீளே வச்சுப்பிட்டு அந்தாண்டே போ. அதுக்கு மின்னே அப்பாலே இப்பாலே நகந்தின்னா முட்டியைப் பேத்துப்புடுவேன் சாக்கிறதே.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.