ஜனங்கள் : இவனைக் கொல்லுங்க; மகா பாவியாகிய இவனை உயிருடன் விடக்கூடாது.
(மாதவராயருடைய கழுத்தில் இருந்த எருக்க மாலையை வஸந்தஸேனை கழற்றி வீரசேனனுடைய கழுத்தில் போடுகிறாள்)
வீர : ஹா! வஸந்தஸேனை பெண்மயிலே! என் பேரில் இரக்கம் கொள். இனி நான் உன்னை நினைப்பதே இல்லை.
சசி : இவனை உயிருடன் விட்டால் நகரத்திற்குப் பெரிதும் துன்பம் உண்டாகும். இன்னம் யாருக்கு இவன் எவ்விதத் தீமை செய்வானோ இவனுடைய உயிரை வாங்குங்கள்.
மாத : ஐயா! இப்படி வாரும் சொல்வதைக் கேட்பீரா?
சசி ஆட்சேபனை என்ன?
மாத : அப்படியானால் இவனை விட்டு விடுங்கள்.
சசி: நல்ல காரியம்; வஸந்தஸேனையை கொல்ல *நினைத்ததும் அல்லாமல் உங்களுடைய உயிருக்கும் உலை வைத்தானே! இந்தப் படுபாவியையா உயிருடன் விடுகிறது?
மாத : எவ்வளவு விரோதியான போதிலும் இவன் மனப் பூர்வமாக அபயம் என்று நம்முடைய காலில் விழுந்த பிறகு இவன் பேரில் நம்முடைய வாள் படலாமா? நான் இவனுக்குக் காட்டும் தயையே இவனுக்குப் பெருத்த தண்டனையாகும். ஆகையால் இவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள்.
சசி : ஆகா! இதுவல்லவோ உத்தம குணம்! சரி. உங்கள் சித்தம் போல ஆகட்டும். (ஆட்களை நோக்கி) இவனை விட்டு விடுங்கள். (வீரசேனன் விடப்படுகிறான்)
வீர : அப்பா தப்பிப் பிழைத்தேன்! (தனக்குள்) இந்த நித்திய தரித்திரப் பார்ப்பானுக்கு இவ்வளவு