சந் : அம்மணி! இதென்ன அதிசயம்! உங்களை மாதவராயர் கொன்றாராம். அதற்காக அவருடைய உயிரை வாங்கப் போகி றார்களாமே!
வஸ : ஆகா! பாதகி என்னால் என் துரைக்கு என்ன ஆபத்து நேர்ந்தது சீக்கிரம், சீக்கிரம்! என்னை அங்கே அழைத்துப் போம்.
சந் : இப்படியே வாருங்கள். வேகமாய் வாருங்கள்!
வஸ : விலகுங்கள். விடுங்கள்.
(மாதவராயர் முதலியோர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்)
(மாதவராயரைக் கழுவிலிடத் துக்குகிறான்)
வஸ : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! கொல்லப்பட்டவள் இதோ வந்தேன்! நிறுத்துங்கள்.
2 சண் : ஆருடா இது?
வஸ : ஆகா! ஸ்வாமி! பாவியாகிய என்னால் உங்களுக்கு இந்தக் காலகதி வந்ததோ! (வந்து அவர் மார்பில் விழுந்து ஆலிங்கனம் செய்ய, அவர் சற்று அப்படியே இருந்து விலகுகிறார்)
ஜன : வஸந்தஸேனை! வஸந்தஸேனை!!
2 சண் : வஸந்தஸேனையா? என்ன ஆச்சரியம்!
சந் : நல்ல காலந்தான் இவர் இதுவரையில் உயிரோடு இருந்தது!
1 சண் : ஐயா இன்னும் நூறு வருசம் உயிரோடெ இருக்கட்டும்.