(Reading time: 21 - 41 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

சந் : அம்மணி! இதென்ன அதிசயம்! உங்களை மாதவராயர் கொன்றாராம். அதற்காக அவருடைய உயிரை வாங்கப் போகி றார்களாமே!

   

வஸ : ஆகா! பாதகி என்னால் என் துரைக்கு என்ன ஆபத்து நேர்ந்தது சீக்கிரம், சீக்கிரம்! என்னை அங்கே அழைத்துப் போம்.

   

சந் : இப்படியே வாருங்கள். வேகமாய் வாருங்கள்!

   

வஸ : விலகுங்கள். விடுங்கள்.

   

(மாதவராயர் முதலியோர் இருந்த இடத்திற்கு வருகிறார்கள்)

   

(மாதவராயரைக் கழுவிலிடத் துக்குகிறான்)

   

வஸ : நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! கொல்லப்பட்டவள் இதோ வந்தேன்! நிறுத்துங்கள்.

   

2 சண் : ஆருடா இது?

   

வஸ : ஆகா! ஸ்வாமி! பாவியாகிய என்னால் உங்களுக்கு இந்தக் காலகதி வந்ததோ! (வந்து அவர் மார்பில் விழுந்து ஆலிங்கனம் செய்ய, அவர் சற்று அப்படியே இருந்து விலகுகிறார்)

   

ஜன : வஸந்தஸேனை! வஸந்தஸேனை!!

   

2 சண் : வஸந்தஸேனையா? என்ன ஆச்சரியம்!

   

சந் : நல்ல காலந்தான் இவர் இதுவரையில் உயிரோடு இருந்தது!

   

1 சண் : ஐயா இன்னும் நூறு வருசம் உயிரோடெ இருக்கட்டும்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.