இன்னும் சில நாட்களிலே பதினெட்டு வயசு முடிஞ்சிடும், எனக்கு பதினெட்டு முடிந்ததும், பதிவுத் திருமணம் செய்துக்கறதா முடிவு செய்துட்டோம், அந்த முடிவை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள அவனோ, நானோ தயாராயில்லே, நீ சம்மதிச்சா, உன்னையும் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துப் போவோம், இல்லைன்னா, நாங்க எங்க நண்பர்கள் பட்டாளத்தோட போய் பதிவு பண்ணிட்டு நேரே இங்கேதான் வருவோம், அவனை அவங்க வீட்டிலே சேர்க்கமாட்டாங்க, அதனாலே அவனும் என்னோட இங்கேதான் தங்குவான்........"
" ரெண்டு பேரும் இன்னும் படிப்பே முடிக்கலே, குடும்பம் நடத்த பணம் வேண்டாமா? அவன் பணம் வைச்சிருக்கானா?"
" அவனிடம் ஏதும்மா காசு?"
" பின்னே, உன்னிடம் இருக்கா?"
" எனக்குத்தான் அப்பா ஒரு கோடி ரூபா தந்திருக்கிறாரே......."
" நீ அந்தப் பணத்தை வைச்சிருக்கியா?"
" என்னம்மா அப்படி கேட்கிறே? உனக்கும் எனக்கும் சேர்த்து ரெண்டு கோடி ரூபா, உன்னிடம் தந்திருக்கிறாரே, அதிலே பாதி உனக்கு, மீதி எனக்குத் தானே? எனக்கு பதினெட்டு வயதானதும், நீ என்னிடம் தரவேண்டிய பணம்தானே!"
அவள் என்னை மீறிப் போய்விட்டாள், நான் சொல்வது எதுவும் அவள் காதில் விழாது என்று புரிந்துவிட்டது!
மறுநாள் அவள் காலேஜிலிருந்து திரும்பும்போது, அந்தப் பையனையும் அழைத்து வந்தாள்!
நான் அவனை வரவேற்கவில்லை, அவனுடன் பேசவுமில்லை, அவனாகவே என்னிடம் வலிய வந்து பேசினான். என் காலில் விழுந்து ஆசிர்வதிக்க வேண்டினான்!
இதுதான் சமயமென, அவனை உட்கார்த்திவைத்து, என் வாழ்வில் நடந்ததை விலாவாரியாக கூறினேன்!
" தம்பி! உங்களைப்போலத்தான் நானும் கார்த்தியும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக காதலித்தோம்! ஆனால், அந்த அழுத்தம், நெருக்கம், போகப் போக, குறைந்து இறுதியில் அவன் என் முகத்தில் பணத்தை வீசிவிட்டு டைவோர்ஸ் வாங்கிண்டு ஓடிட்டான்.
நானும் என் மகளும் நாதியுமில்லாம, சாதியுமில்லாம அனாதையா நிக்கறோம், தம்பி! உங்களுக்கும் அந்த நிலமை வந்துவிடக் கூடாது! நான் சொல்றதை கேளுங்க! படிப்பிலே கவனம் செலுத்தி பாஸ் பண்ணி நல்ல வேலையிலே சேர்ந்து கௌரவமாக வாழ்கிற வழியைப் பாருங்க........"
" அம்மா! உங்களுக்கு நடந்ததுதான் எங்களுக்கும் நடக்கும்னு ஏன் நினைக்கிறீங்க? நாங்க