" அப்பா! மறந்தே போச்சே! அம்மாவை கூப்பிடறேன், நாம் மூணுபேரும் தேர்வு செய்திருக்கிறதை பார்த்துவிட்டு முடிவு செய்வோம். அம்மா! அம்மா!!"
மூவரும் ஒவ்வொன்றாக எடுத்து அலசினர்.
" தியாகு! உன் தங்கச்சி தான் செலக்ட் செய்ததை ஏற்றுக்கலைன்னா, கல்யாணமே வேண்டாம்னு போய்ட்டா! உங்கம்மாவும் இன்னொரு பக்கம் கோவிச்சிண்டு போனவளை திரும்ப கூப்பிட்டு உட்கார்த்தி வச்சிருக்கோம்.
நமக்கேன் வம்பு? பேசாம, உங்கம்மா செலக்ட் செய்ததைப் பார்த்து முடிப்போம். அதுக்கு அவ மகளோட சம்மதம் பெறவேண்டியது, அவள் பொறுப்பு."
" ஓ.கே.ப்பா!"
அம்மா எடுத்துக் கொடுத்த பேப்பரை வாங்கிப் பார்த்தனர்.
தலைப்பில் அனுப்பியவரின் பெயர், விலாசம், உத்தியோகம்,இருந்தது.
அவை திருப்தியாக இருந்தன.
மணமகனைப்பற்றிய விவரங்கள் தரப்பட்டிருந்தது.
"
பெயர்: கங்காதரன்
வயது: இருபத்தெட்டு
பிறந்த நட்சத்திரம்: சுவாதி
கோத்திரம்: காசியப
படிப்பு: பி.ஏ.
உத்தியோகம்: ஏ.ஜி. ஆபீஸ் குமாஸ்தா
இடம்: சென்னை
தோற்றம்: புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
உயரம்: 5'6"
மணப்பெண் உத்தியோகம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. பூர்வீக சொத்துக்கள் உள்ளன.
கூடப்பிறந்தோர் ஒருவருமில்லை. எல்லா சொத்துக்கும், மணமகன் மட்டுமே வாரிசு!
எந்தக் காரணத்தைக் கொண்டும், மணமகனின் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக் குடும்பம் அமைக்கமுடியாது!
இவைகளுக்கு சம்மதமானால், மேற்கொண்டு தொடர்பு கொள்ளவும்."
தந்தையும் மகனும் பேப்பரை கசக்கி எறிந்துவிட்டு தாயின்மீது சினத்தை கொட்டினர்.