Page 8 of 8
நடத்தமுடியுது.
உங்களை இப்பவே முடிவு எடுக்கணும்னு கட்டாயப்படுத்தலே! சாலமனோட அப்பா ராமானுஜத்தோட பேசுங்க! சாலமனையும் மங்களத்தையும் ஒருமுறை இந்தியா வரச்சொல்வோம், நாலுபேரும் பார்த்து பேசின பிறகு இறுதி முடிவு எடுப்போம். அண்ணனுக்கு மங்களத்தை பிடிக்கவில்லைன்னா, இந்த சம்பந்தமே வேண்டாம்! நான் திறந்த மனதோடு விஷயங்களை பார்க்கிறமாதிரி, நீங்களும் திறந்த மனதோடு இருங்க'ன்னு சொல்றேன், அவ்வளவுதான்!"
சுந்தரியை அண்ணன் தியாகு தோளில் தூக்கிவைத்து கும்மாளமிட்டான்.
பெற்றோரும் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.