நெருடும்........"
" அம்மா! கொஞ்சம் மூச்சு விடும்மா! எல்லாம் கரெக்டா நடக்கும், நானும் லோகுவும் ஏர்போர்ட்டிலே காத்திருந்து, அவனை பத்திரமா வீட்டுக்கு டாக்சியிலே அழைச்சிண்டு வரோம், வந்ததும் நீ தயாரா வைத்திருக்கிற விருந்து சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டுவோம்........"
" ச்சீ போடா! என்னமோ ஆடு,மாடு மாமிசம் சாப்பிடறாப்போல, வெட்டு வெட்டுவோம்னு உளர்றே! நான் அவனுக்கு பிடித்த உருளை வறுவல், வெண்டைக்காய் மோர்க்குழம்பு, சேமியா பாயசம், எலுமிச்சை ரசம், வெங்காய சாம்பார், அப்பளாம், ஆவக்காய் ஊறுகாய் எல்லாம் சுடச்சுட அவனுக்கு பரிமாறி, அவன் அதை ரசித்து உறிஞ்சி சாப்பிடற அழகை பார்த்து மெய் மறந்து ரசிக்கப் போறேன்!"
பொழுது விடிந்தது. அம்மா குதூகலமாக சீனுவை வரவேற்கும் பணியில் ஈடுபட்டாள்!
பாபுவுக்கும் லோகுவுக்கும் 'அதைச் செய்', 'இதைச் செய்' என உத்தரவு போட்டுக் கொண்டேயிருந்தாள். வேலைக்காரி வள்ளிக்கும்தான்!
ஒரு கட்டத்தில், பாபுவும் லோகுவும் சிரித்துக்கொண்டே, தாயை கட்டாயப்படுத்தி சோபாவில் அமரவைத்து, கேட்டார்களே, ஒரு கேள்வி!
" அம்மா! அண்ணனுக்காக தடபுடலா என்னென்னவோ செய்றியே! இந்த உபசாரத்துக்காகவும் பாசத்துக்காகவும், அண்ணன் தன் எதிர்கால நலன்களையெல்லாம் மறந்து, இங்கேயே நம்முடன் தொடர்ந்து இருக்கப்போகிறானா? ஒரு மாசமோ, இரண்டோ? பிறகு, தனக்கு மிக நல்ல வேலை கிடைத்திருக்கிறது, அமெரிக்காவில்! வருஷத்துக்கு மூன்று லட்சம் டாலர் சம்பளம்! என்று உன்னை சம்மதிக்கவைத்து, கிளம்பிடுவான்........."
"எனக்குத் தெரியாதா? அதனாலேதான், அவனிடம் மூணு உறுதிமொழி வாங்கியிருக்கேன்: ஒண்ணு, அமெரிக்காவில் படிப்போடு சரி, நம்முடன் இங்கேதான் வேலை பார்க்கணும்,ரெண்டு, அவனுக்கு பொருத்தமா படிச்ச பொண்ணா நான் பார்த்துவைக்கிறவளைத்தான்அவன் கட்டிக்கணும், மூணாவது, தொடர்ந்து சைவ உணவுதான் சாப்பிடணும்னு! அதனாலே, .........உங்களுக்குத்தான் தெரியுமே, அவனுக்கு ஏற்கெனவே நல்ல பெண்ணா பேசி வைச்சிருக்கிறது! சீனு வந்தவுடனே, அவனை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அழைத்துப்போய், அவனுக்கு பெண்ணை பிடித்திருந்தால், அடுத்த முகூர்த்தத்திலேயே, டும் டும் தான், அவனுக்கும் வயசாயிண்டிருக்கே!"
பாபுவும் லோகுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு நகர்ந்தனர்.
மதியம் ஒரு மணிக்கு முன்னமேயே, தாயின் தொல்லை தாங்காமல், இருவரும் ஏர்போர்ட்டுக்கு கிளம்பினர்.