அவனே கற்றுக்கொடுத்தான்.அவனை நினைத்து எப்பொழுதும் பெருமைப்பட்டுக்கொள்வாள்..அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இரவில் அலைபேசியில் உரையாடுவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது..அதனாலேயே இரவு அவளுக்குப் பிடித்தது.
அப்படி ஓர் இரவில் அவள் தன் படுக்கைக்கு நேராக இருக்கும் ஜன்னலின் வழி தெரிந்த நிலவைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தாள்..
அவன்..'எப்பொழுது தான் நம் இருவருக்கும் இடையில் இருக்கும் தூரம் குறையும் என வருந்தினான்..'
அவள்.. 'நிலவு தெரிகிறதா' என்றாள்.
அவன்.. 'இல்லை' என்றான்.
'வெளியில் வந்து பார்' என்றாள்...
வெளியில் வந்து விட்டு 'தெரிகிறது' என்றான்.
'இப்பொழுது இந்த நிலவை நானும் பார்க்கிறேன்..நீயும் பார்க்கிறாய்..நம் பார்வைகள் இந்த நிலவில் இணைந்துவிட்டது.இன்னும் வருத்தமாக இருக்கிறதா நாம் தூரமாக இருக்கிறோம் என்று ?'
'இல்லை' என சிரித்துக்கொண்டான்.
அதில் இருந்து எப்பொழுது அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தாலும் நிலாவைப் பார்த்துக்கொள்வாள்.அவனைப் பிடித்த அளவு அந்த நிலவையும் பிடித்தது அவளுக்கு. அவள் தன்னை நேசிப்பதை விட அதிகமாக அவனை நேசித்தாள்,அதைவிட அதிகமாக அவன் அவளை நேசித்தான்.
ஆனால் காலம் அவர்களை பிரித்தது..இரு வேறு துருவமாக்கியது.பெற்றோரின் மகிழ்ச்சிக்காக அவர்கள் தேர்வுசெய்த ஒருவனை மணக்க சம்மதித்தாள். பிறரின் மகிழ்ச்சிக்காகத் தன் துயரங்களை தன்னுள்ளே புதைத்துவிட்டு பொய்யான புன்னகை ஒன்றை முகமூடியாய் மாட்டிக்கொண்டாள்.தனிமையில் மட்டும் அழுக பழகிக்கொண்டாள்.இரவு நேரங்களிலேயே அவளால் யாருக்கும் தெரியாமல் அழ முடிந்தது.அவளின் உண்மையான மன வெளிப்பாட்டிற்கு இரவு மட்டுமே வசதியாக இருந்தது.அவள் அவளுக்கு உண்மையாக இருக்கும் நேரம் என்பதாலேயே இரவு அவளுக்குப் பிடித்தது.
காலம் உருண்டோடியது.. அவள் தன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப்பின் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாள். அன்று தன் மாதாந்திர