”அட கிளம்பு நேரமாகுது, போ அவளுக்கும் நிறைய வேலைகள் இருக்கும்ல, ஒரு டாக்டரை இப்படி நிக்க வைக்கறது தப்பு சரவணா போப்பா” என சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் உடனே செல்லாமல் தயங்கி நின்றான்.
அந்நேரம் மலரின் தந்தை ரவி வர சட்டென அவரிடம் சென்றான்
”மலரப்பா நீங்களே பாருங்க, உங்க பொண்ணு என்னை கொடுமைப்படுத்தறா என்னை காப்பாத்துங்க” என சொல்ல அவரோ கலகலவெனச் சிரித்தபடியே
”நான் கொஞ்சம் வெளிய போகனும் என்னை நீ ட்ராப் பண்றியாப்பா” என கேட்க அவனும் குதூகலமாக
”அதுக்கென்ன தாராளமா வாங்க நான் உங்களை ட்ராப் பண்றேன்” என சொல்லியவன் தனது பைக்கில் அவரை ஏற்றிக் கொண்டு வைதேகியையும் மலரையும் பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தபடியே
”டாட்டா“ என சொல்லிவிட்டு செல்ல மலரோ கலகலவென சிரித்தாள் அதைக் கண்ட வைதேகியோ
”என்னம்மா சிரிக்கற”
”பாவம் உங்க பையன்”
”ஏன்”
”ஆன்ட்டி உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன்”
”என்னம்மா விசயம்”