Page 38 of 66
”இப்ப என்ன சொன்ன” என கேட்க அவனோ இல்லை என சொல்ல அவளோ கேளாமல் அவனை நெருங்க அவனோ
”வேணாம் வராத” என சொல்ல அவளோ
”வந்தா என்ன செய்வ“ என கேட்டபடியே வந்தவள் அவனின் தோளில் மெதுவாக தலை சாய்த்து அவனை ஆதரவாக அரவணைத்துக் கொள்ள அவனுக்கு ஒரு நொடி அதிர்ச்சி ஏற்பட அடுத்த நொடியே அந்த அணைப்பை ரசித்தான்.
மேகம் ஒன்று அவன் மீது சாய்ந்திருப்பது போன்ற எண்ணம் உருவாக அவனுக்கு சிலிர்பாக இருந்தது
இப்போது அவன் மனதுக்குள் பாடுகிறேன் என வெளிப்படையாகவே பாடினான்.
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
அதைக் கேட்டு மலர் மென்மையாக புன்னகைத்தாள்
”நல்லாதான் பாடறீங்க”
”அய்யோ அப்ப நான் மனசுக்குள்ள பாடலையா”
”மண்டு”
”மலரு” என அன்பாக அழைத்தான் சரவணன்
”ம்” என முனகினாள்