விதத்திலும் எங்களுக்குள் நல்ல பொருத்தம் இருந்தது. ஆனால் மற்றபடி எங்களுக்குள் பல வேறுபாடுகளும் இருந்தது. எனக்கு புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும். கதைகள் என்று மட்டும் இல்லை பொதுவான எல்லா துறைகளிலும் படிக்கும் ஆர்வம் இருந்தது. அரசியல் தொடங்கி ரமணிச்சந்திரன் கதைகள் வரை ஒன்று விடாமல் படிப்பேன். விஜய் எனக்கு நேரெதிர். அவருக்கு அவருடைய வேலை சம்மந்தமான புத்தகங்கள் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை.
அதே போல் எனக்கு கவிதைகள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பாடலிலும் வரிகளை தெரிந்துக் கொண்ட பின்பு தான் அதை எனக்கு பிடித்த பட்டியலில் சேர்ப்பதா இல்லையா என்று நான் முடிவு எடுப்பதே. என் வருங்கால கணவருக்கும் இது போன்ற ரசனைகள் இருக்க வேண்டும் என்று மனதில் ஆசை இருந்தது. ஆனால் விஜய்க்கு இதில் எல்லாம் ஆர்வமில்லை. நான் எனக்கு பிடித்த பாடல்கள், கவிதைகள் என சொல்வதை பல மணி நேரம் பொறுமையாக கேட்பார். ஆனால் அவரிடம் இருந்து அதே போன்று எதையும் எதிர்பார்க்க முடியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் அவர் பணி புரியும் வங்கி துறை சம்மந்தப் பட்ட, நிதி தொடர்புடைய விஷயங்கள் தான்.
சரி இது எல்லாம் பரவாயில்லை, போகட்டும் என்று நினைக்கலாம்... அவர் எனக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. திருமணத்திற்க்காக சேலை எடுக்க சென்ற வாரம் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து அந்த பிரசித்தி பெற்ற கடைக்கு சென்றிருந்தோம். எனக்கு பிடித்த சிவப்பு நிற சாயலில் சேலை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்பே அவரிடம் சொல்லி வைத்திருந்தேன். முதலில் என் விருப்பம் போல் ஒரு மெல்லிய சிவப்பு சேலையை தான் அவர் எடுத்தார், ஆனால் அதற்குள் அவருடைய அக்கா ஒரு அழகிய வாடாமல்லி நிற சேலை எடுக்கவும், அனைவருக்கும் அது பிடித்து போனது. எனக்கே கூட அதுவும் பிடித்து தான் இருந்தது ஆனால் அது என்ன எனக்கு தேர்வு செய்வதில் எனக்கு பிடித்த நிறத்தை எடுக்காமல் இருப்பது என்று எனக்குள் ஒரு கேள்வியும் எழுந்தது.
அந்த சேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதை அவரிடம் தெளிவாக கண் ஜாடையில் உணர்த்தினேன். ஆனாலும் இறுதியில் அனைவருமாக அதை தான் தேர்வு செய்தார்கள். கடையில் இருந்து வெளியே வரும் போது விஜய் என்னிடம் மெல்லிய குரலில் சொன்னார்,
“பவி, இது பேமிலி பங்க்ஷன், சில சமயம் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்க தான் போக
உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்
Very nice story