(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.
சிறுகதை - எனக்கு பிடித்த பாடல்! - பிந்து வினோத்.

வேண்டும். சாரீ எந்த கலரில் இருந்தால் என்ன? இதுவும் கூட நல்லா தானே இருக்கு?”

   

நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். என் கோபத்தை புரிந்துக் கொண்டவர் போல்,

   

“வீட்டுக்கு போன பிறகு அம்மாவிடம் பேசு உனக்கு...”

   

அவர் பேச்சை கேட்கும் பொறுமை எனக்கு இல்லை,

   

“போதும் நிறுத்துங்க! எந்த விஷயத்தில் தான் எனக்கு பிடிச்ச மாதிரி நடந்து இருக்கீங்க, இப்போ புதுசா சொல்ல?”

   

நான் கோபத்தில் பேச, முதல் முறையாக அவரும் பொறுமையை இழந்தார்.

   

“ச்சே... பவித்ரா இந்த கல்யாணமே தப்போன்னு எனக்கு தோணுது... பேசாமல் இந்த கலயாணத்தை நிறுத்தி விட்டால் என்ன?“

   

நான் திகைத்து போய் அவரை பார்த்தேன். இதுவரை எத்தனையோ முறை நான் கோபப்பட்ட போதும் கூட இது போல் எல்லாம் நான் எண்ணி பார்த்ததில்லை.

   

அது நடந்து ஒன்றரை வாரங்கள் ஆகி விட்டது. அதன் பின் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. பொதுவாக நான் கோபப்படும் போதெல்லாம், ஒன்றிரண்டு மணி நேரத்தில் ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பி என்னை சமாதானப் படுத்த முயல்பவர் இப்போது எதுவும் செய்யவில்லை. ரொம்பவே கஷ்டமாக இருந்தாலும் நானும் அவருடன் பேசவில்லை. என் மேல் தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரின் மௌனம் என் கோபத்தை அதிக படுத்தியது. கன்னாபின்னாவென்று திட்ட வேண்டும் போல் இருந்தது. அவரிடம் பேசினால் அல்லவா திட்ட முடியும்? அதுவும் செய்ய பிடிக்கவில்லை. அது தான் இரண்டு நாளாக அம்மாவிடம் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்டுக் கொண்டிருந்தேன்.

   

2 comments

  • உங்கள் எழுத்துகளில் ஏதோ ஒரு தனித்தும் இருக்கிறது என நினைக்கிறேன். படிப்பவர்கள் மனதை இலகுவாக்குகிறது.வாழ்த்துகள் பிந்து வினோத்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.