(Reading time: 29 - 58 minutes)
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்
சிறுகதை - கோசலை - ரஞ்சகுமார்

விரைந்து போனான்.

   

அம்மா பதைத்தாள் கி¡£ச்சிட்டாள்.

   

"சீலன் எங்கையப்பு...."

   

பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினான்.

   

"சீலன் எங்கையப்பு...."

   

இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது.

   

இவ்வாறான எத்தனை அன்னையா¢ன் சோகங்களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது.

   

"ஐயோ, என்ரை சீலன் எங்கே...."

   

சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள்.

   

இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று.

   

"சீலன் எங்கை?"

   

அவளுக்குத் திருப்பிதயான பதிலைத் தர ஒருவரும் இல்லை.

   

"சீலன் எங்கை?"

   

அம்மாவின் பா¢தாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.