“பிரீ கண்ணா, உன்னை போய் நான் மறப்பேனா? இது எல்லாம் அந்த விஜி பிசாசுக்காக... சுமித்ரா தெளிவா நான் சொல்லி கொடுத்த மாதிரியே நான் சொல்ல வேண்டாம்னு சொன்னதா தெளிவா சொன்ன பிறகும் நீ என்னை கான்டாக்ட் செய்ய முயற்சி செய்ய கூட இல்லையே...”
அவன் சொல்வது புரிய ஒரு சில நொடிகள் எடுத்துக் கொண்டவள்,
“ஓ! ஆனால் எனக்கு உங்களோடு பேச தயக்கமா இருந்தது...”
“நல்லா தயங்கின போ! உன்னிடம் அன்று நோஸ் கட் வாங்கிய பின் ரொம்ப கஷ்டமா இருந்தது... ஒருவேளை உன் மனசில் வேறு யாரோ இருக்காங்களோன்னு கூட சந்தேகமா இருந்தது... சுமித்ரா உனக்கு படிப்பிலும் அந்த துறையிலும் இருக்கும் ஆர்வத்தை பத்தி சொன்னாங்க... சரி ஒரு வருஷம் கழிச்சு நேரா உங்க அப்பாவிடம் பேசி பார்க்கலாம்னு நினைச்சேன்... என் தங்கைன்னு ஒரு குட்டி சாத்தான் இருக்கே அவள் வேற உன் காதல் உண்மையா இருந்தா அண்ணியே வந்து உன்னிடம் லவ் சொல்லுவாங்கன்னு என்னை ஓட்டிட்டு இருந்தா... அது தான் நாங்க பெட் வச்சிருந்தோம்...”
“பெட்டா?”
“யெஸ்... நீயாகவே என்னிடம் வந்து உன் காதலை சொன்னா தான் என் லவ் வெற்றி பெற்றதா அர்த்தமாம் அந்த மேதாவிக்கு!”
“என்ன அண்ணா என்னை பத்தி பேசிட்டு இருக்க?” என்றபடி வந்த விஜி,
“என்ன அண்ணி நீங்க? இவனை பத்தி அவ்வளவு எடுத்து சொன்னேன், ஆனாலும் இப்படி சொதப்பி என்னை பெட்டில் தோற்று போக வச்சிட்டீங்களே...”
“ஹேய் வாலு என்னை மட்டும் எதுவும் சொல்ல கூடாது செய்ய கூடாதுன்னு ஆயிரத்தி எட்டு ரூல்ஸ் போட்டுட்டு, நீ இப்படி சைடில வில்லி வேலை எல்லாம் வேற செய்தீயா?”
“க்கும்... உனக்கு போய் இத்தனை அழகான நல்ல அண்ணியா? பாவம் அவங்க வாழக்கை