“தூக்கம் வரலையா பிரீதா?”
“இல்லை அம்மா... மணி ஏழு தானே ஆகுது... நீங்க தூங்க போறீங்களா?”
“ஆமாம்... நீ ஏன் ரொம்ப டல்லா இருக்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா...”
“ஒன்னுமில்லையா, இல்லை அந்த வினய்யினாலா?”
என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்து பார்த்தாள் பிரீதா!
“என்ன பார்க்குற? உன்னை இங்கே வேலைக்கு அனுப்பியதே அவன் தானே? ஆனால் ஏதோ தெரியாதவன் போல நடிக்குறான்....”
“...”
“என்ன விஷயம் பிரீ?”
என்னவென்று சொல்வது? பிரீதா குழப்பத்துடன் செல்லம்மாவை பார்த்தாள்.
“சரி விஷயம் எதுவா வேணா இருந்துட்டு போகட்டும்... நீ ஏன் இப்படி ஒரு மூலையில் சோகமா உட்கார்ந்திருக்க? என்ன எதுன்னு அவனிடமே நேரா கேட்க வேண்டியது தானே?”
“ஆனால் அம்மா...”
“பிரீ, யாராவது ஒருத்தர் முதலில் பேசினால் தானே எல்லாம் சரி ஆகும்... உன்னை இப்படி பார்க்க எனக்கு பிடிக்கலை... அவன் வாக்கிங் போறேன்னு தோட்டத்துக்கு போனான்... இது நல்ல சந்தர்ப்பம் போய் பேசு... பேசினால் எல்லா குழப்பம் எல்லாம் சரியா போகும்... காலையில் உன்னை வழக்கமான உற்சாகத்துடன் பார்க்கணும், சரியா?”