அடுத்த அரைமணி நேரத்தில் அவன் மருத்துவமனையில் இருந்தாள் பாரதி. மீட்டிங் முடிந்து வர இன்னும் நேரம் இருப்பதாக தவத்தின் நண்பர் தெரிவிக்க. அவன் அறையில் சென்று அமர்ந்தாள். .
முந்தைய நாள் இரவு ஏதோ ஒரு படத்தை பார்த்து விட்டு தாமதமாக உறங்கியதால் அவள் கண்கள் சொருக அந்த மேஜையின் மீது தலை சாய்த்து உறங்கினாள்.
கண்ணால கண்ணால என்மேல என்மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ
கலவரம் புரிஞ்சுபுட்ட
பாரதியின் அலைப்பேசி ஒலிக்க கனவிலிருந்து விழித்தாள். மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க பயந்து இருந்தவள் தன்னிலைக்கு வருவதற்குள் போன் கட் ஆனது. தவம் அழைத்திருந்தான்.
"ச்சை என்ன கனவு இது, கனவுக்குள ஒரு கனவு அதுக்குள்ள இன்னொன்னு.. ச்ச ச்ச இப்படி பயந்துடோமே" அவள் தனக்குள் பேசிக் கொண்டிருக்க மீண்டும் அலைபேசி அழைத்தது.
"ஹலோ"
"ஹலோ தவம்"
"பாரதி ஒரு வித்யாசமான கேஸ் வந்திருக்கு"
பாரதிக்கு திக்கென்றது. அறையை இருளும் அமனுஷ்யமும் ஒரு சேர சூழ்ந்தது. அவள் கண்ட கனவுக்குள் வந்த கனவுகள் அனைத்தும் ஒரு நொடி பொழுதில் மூலையில் வந்து செல்ல அவள் உடல் உதறல் எடுத்தது.
துர்நாற்றம் அறை முழுவதும் பரவ, அந்த அமானுஷ்ய குரல் அவளை ஆட்கொண்டது.
"பாரதி....."
அவள் மனம் சொல்லியது
"இது முடிவல்ல...."
This is entry #64 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}