“எதுக்கு நடுராத்திரில எனக்கு ஐஸ் வெக்கறீங்க…? என்ன பண்ணி வெச்சு இருக்கீங்க…?” என்றவள் சுற்றிலும் பார்வையை சுழட்ட,... எலிப்பொறி கண்ணில் பட்டது.
“நேத்து மதியம் தானே பிடிச்சோம், அதுக்குள்ள எலி, வந்துடுச்சா…? நீங்க பார்த்தீங்களா…? எப்போ…? எங்க…? எலி மூளைக்குள்ள ஜி.பி.எஸ் (G.P.S) எதாவது இருக்கா…? எப்படி சரியா, நம்ம வீட்டைக் கண்டுபிடிச்சு திரும்ப இங்க வந்துச்சு…? வேற எலியோ…! அந்த எலியோட ஜோடியா…? இல்ல அந்த எலியோட பேபியா…?” விடாமல் மியா கேள்விக் கணைகளைத் தொடுக்க,...
மியா பேச ஆரம்பித்த போதே அதிர்ச்சியானவன், ஒருவாறு சுதாரித்து, “என்ன... எலியை பிடிச்சுட்டியா…?” என்க,...
“ம்ம்ம்… அதுவா, எப்படியோ பொறிக்குள்ள சிக்கிடுச்சு…! மதியம் சாப்பிட வந்த வாசு சார் கிட்ட சொன்னேன். அவர் தான், ‘திரும்ப டியூட்டிக்கு போறப்ப வழியில எங்காவது விட்டுடறேன்னு’ தூக்கிட்டு போனார். ‘எலியை ரொம்ப தூரத்துல விட்டுட்டேன்,... நீயே இதை வெச்சுக்கோம்மா’ன்னு பொறியை சாயங்காலம் வந்து கொடுத்துட்டு போனார்.”
மியா பேசப்பேச,... சஞ்சய்யின் முகத்தைக் காண வேண்டுமே…! கணவனின் முகத்தில் இருந்து எதுவும் புரியாமல், “என்ன ஆச்சு மாம்ஸ்…” என்றவளுக்கு,... தன் கனவைப் பற்றி சொல்ல,... வாய் விட்டு சிரித்தாள்.
“அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்… சாரி சஞ்சு” என்றவள்,... உடனே, “பட், நல்ல டாபிக் சஞ்சு… போஸ்ட் போட்டா, வைரலா கூட ஆக சான்ஸ் உண்டு. நீங்க ஓவர்நைட்ல பெரிய ஆளா ஆகிடுவீங்க மாம்ஸ்” என்று சிரித்தாள்.
“வேணாம் செல்ஸ்… என்னைக்கும் நான் இந்த மியாவோட ஆளா மட்டும் இருந்தாப் போதும்.”
“அ… அ… அஸ்கு லஸ்க்கு… நாளைக்கே போஸ்ட் போடறோம் மச்சி…”
“மியா… மியா ம்மா… செல்லு...” என்று கெஞ்சும் சஞ்சய்யை, அவன் மியாவை சமாளிக்கத் தனிமையில் விடுவோம்.
This is entry #71 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}