அவன் பாலை வாங்கி பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அவளை அணுகினான் , அவள், அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. "சஞ்சு" என்று கிசுகிசுத்தான் அந்த குரல் அவளை மயக்கியது. அவளை, அவன் தொட்டபோது தன்னை மறந்தாள்.... அவர்களின் முதலிரவு பத்து வருடத்திற்கு பிறகு நடந்தது
"என்னடா கடைசியா இந்த கரியவன ஒத்துந்துட்டியா ?"
" அந்த மாயக் கண்ணனும் கரியவந்தாங்க, அவனை பிடிக்காதவங்க யார்?, கோவில்ல இருக்கற கடவுள் சிலைகளும் கருப்புதாங்க,கருப்புன்றதனால கோவிலுக்கு போய் அந்த கடவுளை பார்க்காம இருக்கோமா என்ன ?
கருப்புன்றதனால கோவிலுக்கு போய் அந்த கடவுளை பார்க்காம இருக்கோமா என்ன ?
கருப்புன்றதனால கோவிலுக்கு போய் அந்த கடவுளை பார்க்காம இருக்கோமா என்ன ?
திருவடியும், கையும், திருவாயும் செய்ய
கரியவனை காணாத கண் என்ன கண்ணே?
கண்ணிமைத்து காண்பார்தம் கண் என்ன கண்ணே?
என்று பாட்டு பாடினாள்
“அப்புறம், ஒங்கள நீங்களே கரியவன்னு எதுக்கு சொல்றீங்க, வெளித்தோல் கருப்பா இருக்கலாங்க மனசு வெள்ளையா இருக்கு உங்களுக்கு, அத விட வேற என்ன வேணும்."
எனக்கு, அந்த கரியவனும் நீங்களும் ஒண்ணுதாங்க, என் வாழ்க்கையை இவ்வளவு தூரம் உயர்த்தி எனக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்திருக்கீங்க, நான் பேரும் புகழுமா இருக்கணும்னு எங்க அம்மா அப்பா மாதிரி ஆச பட்டீங்க அவங்க இருந்தா கூட இவ்வளவு தூரம் எனக்காக செய்ஞ்சிருப்பாங்களான்னு தெரியாது" என்று கண்ணீர்விட்டாள்
சாரிங்க,உங்கள இவ்வளவு வருஷமா காக்க வச்சதுக்கு, நீங்களும் ஒதுங்கியே இருந்துட்டீங்க, நீங்க வேணும்னு கேட்டிருந்தா நான் வேணாம்னா சொல்லபோறேன்.
அவன், அவளை அனைத்து, “நான் எவ்வளவு கொடுத்துவச்சவன் தெரியுமா, உன்ன மாதிரி ஒயிப் கிடைச்சதுக்கு?”
"நான் உங்களைவிட கொடுத்து வச்சவங்க, அதனாலதான் உங்கள கணவராகவும், நல்ல ஒரு பிரெண்டாகவும் கிடைச்சிருக்கீங்க, தன்க் யு சூர்யா,! "என்றாள்
காதலோடு அவன் காதில்ஐ லவ் யு’ கூறினாள்..
“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” என்ற பாடலுடன் அவள் போன் மணி அடித்தது.அதை எடுக்க போன அவளை இழுத்து அனைத்து “ ஐ லவ் யு” எனறான் அவளின் காதல் கணவன்.
This is entry #54 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்
எழுத்தாளர் - VJG
{kunena_discuss:1083}