(Reading time: 13 - 25 minutes)

"..அப்போ குடும்பமே சேர்ந்து தான் ஊர் சுத்த அனுப்புறிங்களா..?? நல்ல குடும்பம்.."

"அத்தை.. தப்ப உங்க மேல வெச்சுக்கிட்டு எங்க மேல போடறது தப்புங்கத்த.. நானும் உங்க பையன் மாதிரி ரோட்டில குடிச்சிட்டு கலாட்டா பண்ணுனேனா நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணி வெச்சிருப்பீங்களா..??",என்று கேட்டான் அஷ்வின்.

"என்ன மாப்பிள்ளை இப்படி பேசறீங்க..?? இந்த காலத்து பசங்க அப்படி இப்படி தான் இருப்பாங்க.. பொண்ணுங்க தான் கொஞ்சம் அனுசரிச்சு இருக்கனும்.."

"சரிங்க அத்தை.. அப்படினா நானும் டைலியும் குடிச்சுட்டு வீடுக்கு போறேன்.. உங்க பொண்ண அனுசரிச்சு என்கூட குப்பை கொட்ட சொல்லுங்க",என்றான் கோபமாக.

"என்ன மாப்பிள்ளை நீங்க.. நான் அப்படி சொல்லலைங்க.. கல்யாணம் ஆனா அவன் திருந்திடுவானுங்க", என்றார் அமைதியாய்.

"அத்தை.. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே..",என்றாள் அவ்வளவு நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்ணா..

அவர் அவளை பார்த்துவிட்டு பேசு என்பது போல் சைகை செய்தார்.

"என்ன பார்த்தா உங்களுக்கு டாக்டர் மாதிரி இருக்குதா அத்தை..?? நான் ஏன் கேட்கறேனா உங்க பையனை திருத்த மறுவாழ்வு மையத்துக்கு கூட்டிட்டு போகாம என்னைய கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்களே அதான் கேட்கறேன்..."

".............."

"அது எப்படி அத்தை உங்களால் திருத்த முடியாத உங்க பிள்ளையை நான் திருத்திடுவேனு நம்பறீங்க..?? சப்போஸ் நீங்க சொன்ன படியே நான் அவரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வெச்சுக்கோங்க அதுக்கப்புறம் என்னால அவரை திருத்த முடியலைனா அப்போ என்ன பண்றதா உத்தேசம்..?? உங்க பிள்ளையோட சேர்ந்து என் வாழ்க்கையும் போறதுக்கா..??"

".............."

"இதை எல்லாத்தையும் நீங்க உங்க பிள்ளை மேல இருக்கற பாசத்துள்ள சொல்லறீங்கன்னு வெச்சுப்போம்.. எங்க அண்ணன் வாய் வார்த்தைக்காக குடிச்சிட்டு வீட்டுக்கு போவேனு சொன்னதையே ஏத்துக்க முடியல உங்களால.. அப்போ உங்க வீட்டு பொண்ணுனா ஒரு நியாயம் எங்களுக்குனா வேற ஒரு நியாயமா..??"

".............."

"ஏன் அத்தை இப்போ மட்டும் பேசாம இருக்கீங்க..??"

அவள் கேட்கும் கேள்விகள் சரி என்பதால் அவரால் பதில் கூற இயலவில்லை.. ஏதோ முடிவெடுத்தவராய் அனைவரையும் நோக்கி பொதுவாக பார்த்து,"இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்", என்றார் மெதுவாக.

கணவரை நோக்கி திரும்பிய சத்யவதி போகலாம் என்று தலையசைத்தவர் அந்த வீட்டை தியாகித்தார்..

வர்ணாவிற்கு வரும் வாழ்க்கை துணையை பற்றி நமக்கு தெரியாது..ஆனால் சத்யவதி இனி உண்மையை கூறியே சுரேஷை திருமணம் செய்து வைப்பார் என நம்புவோம்..

வணக்கம் நண்பர்களே..!! இக்கதையில் வரும் வர்ணாவும் நவீராவும் சத்யவதி அம்மாவும் உங்களை ஈர்ப்பார்கள் என நம்புகிறேன்.. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி...!!!

 

This is entry #97 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - வசுமதி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.