அடுத்து அவளும் பதில் சொல்ல வில்லை ஒரே ஒரு வார்த்தை அனுப்பி வைத்திருந்தாள் தாங்க்ஸ் என்று
அடுத்து வந்த இரு நாள் களில் இவனிடம் பேசவும் இல்லை இவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை
மனதில் வலி வந்தது கண்ணனுக்கு இந்த நிலையே தொடர அவளின் பாரா முகத்தை தாங்கி கொள்ள முடிய வில்லை அந்த ஒற்றை பார்வை இல்லாமல் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை
அடுத்த நாள் என்கிட்ட பேசு என்று மெஸேஜ் செய்தான் அவளும் அழைத்தாள். நான் உன்கிட்ட முத்தம் கேட்டது என்னோட காதலியா நினைத்து தான் வருங்கால மனைவியா உன்னை ஆக்கி கொள்ள தான் போதுமா
நிஜமாவா அதை ஏன் என்கிட்ட சொல்லலை
அது அது வந்து எனக்கு வீட்டில அதிகமான பிரச்னை இருக்கு என்னால இப்ப அதை சொல்ல முடியாது. நமக்கு இப்பவே கல்யாணம் நடக்காதது கொஞ்ச நாள் காத்திருக்கணும்
பிரச்னை என்ன என்று சொல்லுங்க சரி பண்ண என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ஏன் இப்ப உங்களை கேக்குறேன் தெரியூமா நேத்து ரெண்டு பேர் வந்தது என்னை பொண்ணு பார்க்க
ஓ அதனால தான் அன்னைக்கு நான் யாரு என்று கேட்டியா. அதெல்லாம் நடக்காது பார்த்து கொள்ளலாம் பார்த்து விட்டு தான போய்ருக்காங்க முடிவு செய்யல தான ஆனா உங்க அப்பா கிட்ட எப்டி பேசுறது னு யோசிக்கணும்
அதுலாம் யோசிக்கலாம் உங்க பிரச்னை சொல்லுங்க.
அது சரி சொல்றேன் என் குடும்பத்தை பற்றி என்ன நினைக்கிற
நினைக்க என்ன இருக்கு உங்கள பற்றி எனக்கு எதுவும் தெரியாது நீங்க சொல்லவே இல்லை ஆனா எனக்கு அத பற்றி கவலை இல்ல உங்கள பற்றி மட்டும் தான் யோசிக்கணும் உங்களுக்காக அவங்க என்ன கொடுமை செஞ்சாலும் தாங்கி கொள்வேன். நீங்க கஸ்ட பட்ட குடும்பம்னு தெரியும் . எங்க குடும்பமும் பணக்காராங்க லாம் கிடயாது . உங்க வளர்ச்சிக்கு நான் துணையா இருப்பேனே தவிர உங்களை கஸ்ட படுத்த மாட்டேன். உங்களுக்கு வீட்டில அதிக பொறுப்பு இருந்தா சொல்லுங்க நான் எங்க வீட்டில பேசி காத்திருக்கேன் உங்களுக்குாக இப்ப என் சிரிக்குறீங்க
உனக்கு யார் சொன்னா நான் கஸ்ட பட்ட குடும்பம் என்று. அதெல்லாம் பணக்காராங்க தான். கடமை ஒண்ணும் கிடயாது. சின்ன வயசுல அதிகமா படிப்பு வரல அதனால இந்த வேலைல இறங்கி விட்டேன். அதனால வீட்டில இருக்குற எங்க தாத்தா க்கு என்ன பிடிக்காது
அவருக்கு என்ன பிடிக்காதது அதனால வீட்டில இருக்குற அப்பா அம்மா அத்தை சித்தி சித்தப்பா உம் பாசத்தை இருந்தாலும் என்கிட்ட காட்ட மாட்டாங்க என்ன முக்கியம் னு நினைத்தது நீ மட்டும் தான்
அப்டிலாம் இல்லை உங்களை எல்லாருக்கும் பிடிக்கும். அப்டியே பிடிக்க வில்லை என்றாலும் நான் வந்த பிறகு உங்க கிட்ட எல்லாறையும் பேச வச்சிரேன் சரி தானே
இல்லை தேனு பிரச்சனை அது இல்ல. எங்க அத்தை சொன்னேன் ல அவங்களும் அவங்க பொண்ணு கீதாஉம் எங்க கூட தான் இருக்காங்க மாமா சின்ன வயசுலே இறந்து விட்டாங்க கீதாக்கும் எனக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாள் முன்னாடியே முடிவு பண்ணிட்டாங்க
உன்னை பார்க்குறதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் அவங்க சொன்னது எதிர்த்து எதுவுமே பேசலை ஆனா இப்ப எல்லாமே நீ தான் எனக்கு இப்பவும் வீட்ட விட்டு என்னால உன் கூட வர முடியும் ஆனால் அவங்க எல்லாரும் ரொம்ப வருத்த பாடுவாங்க அவங்கள சம்மதிக்க வைக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். ஒரு வருசத்துல கீதா கல்யாணம் பதி பேசுவாங்க அது வரைக்கும் பொறுமையா இருந்து அடுத்து தான் சொல்லணும் மா
ஹ்ம் நான் காத்திருக்குறேன் ஆனா நான் வீட்டில இப்ப சொல்லியே ஆகணும் இல்லாட்டி எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிறுவாங்க கவலை படாதீங்க நான் நீங்க என்னை விரும்புரிங்க என்று சொல்ல மாட்டேன்
உங்க கிட்ட என்ன பிடிச்சிருக்கானு கேட்டா மட்டும் பிடிச்சிருக்குனு சொன்னா போதும் சரியா.
வீட்டில பேசிறுவியா பயமா இல்லைய அத்தைக்கும் மாமாக்கும் என்னை பிடிக்குமா நீ விரும்புறத்தா மட்டும் சொன்னா உன்னை தப்பா நினைப்பாங்க மா
பரவாஇல்லை நான் பேசிகுறேன்
அடுத்து அவள் சென்று நின்றது தன் அப்பாவிடம் தான் அப்பா
என்ன பாப்பா
ஆமா அவளுக்கே கல்யாண வயசு வந்துட்டு இன்னும் பாப்பாவாம்
நீ சும்மா இரு ராணி சொல்லு பாப்பா என்ன
எனக்கு கல்யாணம் செய்ய போறியா
ஆமா டா வயசு ஆகி விட்டது பண்ணனும்