(Reading time: 17 - 34 minutes)

"ரொம்ப சந்தோஷம்மா. என் பையனின் மனசுக்கு பிடிச்ச பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா அந்த முகத்தோட உன்னை பார்த்த போது என்னால் ஏத்துக்க முடியலை. இப்போ எல்லாமே நல்ல படியா முடிஞ்சுது. கூடிய சீக்கிரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்,  என்னப்பா இப்போ சந்தோசம் தானே ? “என்றார் .

அவன் ஒன்றுமே சொல்லாமல் இருப்பதை பார்த்துவிட்டு "சரிம்மா நாம கொஞ்சம் வெளியில இருப்போம் , அவுங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்“ என்று கூறிய சுந்தரேசன் ரேணுகாவையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். 

“என்னாச்சு ஆகாஷ், ஏன் ஒண்ணுமே பேசமாட்ரீங்க”  என்றபடி அவனை நெருங்கி வந்தவள் அவன் இன்னும் மௌனமாகவே இருப்பதை பார்த்து “என் கண்ணனுக்கு இன்னும் என் மேல கோபமா ? நா பண்ண எல்லா தப்போட நா உங்ககிட்ட சொல்லாம பிரிஞ்சு  போன   தப்பையும் சேத்து மன்னிச்சுடுங்க ஆகாஷ் . இனி நா உங்களை விட்டு பிரியறது  நா செத்ததுக்கு அப்புறம்தான்  " என்றாள் நிலா.

பதறிப்போய்  அவள் வாயைப்  பொத்தினான்  அவன்  " உண்மையில் எனக்கு பேச வார்த்தைகளே இல்லை கண்மணி, நீ வேறொருவருக்கு சொந்தமாயிட்டேன்னு நெனைச்சு எவ்வளோ துடிச்சிருப்பேன் தெரியுமா? உன்னை என் உயிரா நேசிச்சேன், அதோட எதிரொலி கொஞ்சம் கூட உன் மனசில் இல்லையான்னு எவ்வளோ நொந்திருக்கேன். ஆனா இப்போ நீயும் என்னளவுக்கு நேசம் வச்சி எனக்காக உயிரை விடற அளவுக்கு போயிருக்கேன்னு நினைக்கும்போது  எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ? அந்த நிலாவுக்கு ஆகாயம் சொந்தமானதுபோல என் நிலாவுக்கு இந்த ஆகாஷ் என்றுமே சொந்தமானவன் தான் . நீ என்னிடம் திருமணத்துக்கு சம்மதம் கேட்கணுமா? நா எப்பவுமே உன்னுடையவன்னு உனக்கு ஏன் தெரியலை " என்றபடி அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு அவள் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தான்.

தனக்கு சொந்தமான ஆகாயத்தில் மேகத் திரை விலக்கி முழுநிலாவும் பவனி வரத் தொடங்கியது. 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.