(Reading time: 15 - 30 minutes)

ஹ்ம்ம்.. இப்போ தெரியுது பசங்க ஏன் பொண்ணுங்ககிட்ட கவுந்துடரானுங்கன்னு...!! சும்மா ஜிவ்வுன்னு இருக்கே... இந்த பார்வைக்கே சரண்டர் ஆகலாம் போல... ஆனா எங்க..!! நான் மட்டும் இப்போ ரொமன்ஸ் பண்ணேன்... இந்த சின்ன மேடத்தோடா காதல் மறுபடி ரூமுக்குள்ள போய் உட்காந்து.. கதவ வேற டைட்டா பூட்டிக்கும்..!! வேண்டாம்.. வேண்டாம்.. அடுத்த பல்பு வாங்க நான் தயார் இல்லப்பா... கண்ட்ரோல் ரா உதய்..’ என்று புலம்பிக்கொண்டான்.

சிறிது நேரம் போனை ஆராயும் சாக்கில் உதய்யும் அவனை ஆராயும் சாக்கில் காவ்யாவும் அமைதியாக இருக்க.. அப்படியே கழிந்தது சில நிமிடங்கள்..

திடீரென்று... “ஹே காவ்ஸ்... நான் தண்ணீல விழுந்தத யாரும் பார்கலையே...”என்று வினவிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவன் கண்ணில் அகப்பட்டனர் டாலி மற்றும் மேகன், மாடி அறை பால்கனியில்.!

டாலி, வாய்கொள்ளா சிரிப்புடன் கையில் இருந்த மொபைலை இவனை நோக்கி ஆட்டிக்கொண்டே அருகில் இருந்த மேகனை ஒரு பெருமிதப் பார்வை பார்க்க... அவனோ, ஒன்றும் செய்யவும் முடியாமல்.. கூறவும் முடியாமல்.. ‘ஒன்னும் பண்ண முடில.. சாரி’ என்று செய்கையில், கைகளை விரித்து தலையை இல்லை என்பதுபோல் ஆட்டிவிட்டு குனிந்துக்கொண்டான்.! 

குரலில் பரிதாபத்துடன், “சிக்கினாண்டா சின்னத் தம்பி” என்ற காவ்யாவை அதைவிடப் பரிதாமாகப் பார்த்தான் உதய்.!!

வீட்டினுள் ஹாலில் குழுமியிருந்தனர் மற்ற அனைவரும். நடுநாயகமாக ககன்.!

“சொல்லுங்கப்பா... எப்படி எல்லாரும் வந்தீங்க பார்க்குக்கு..? யாரு அரேஞ் பண்ணது இவ்வளோ சர்ப்ர்ரைஸ்..? என்கிட்டே ஒரு வார்த்தைக் கூட யாரும் சொல்லல... நான் உங்க மேல எல்லாம் செம கோபத்துல இருந்தேன்.. அத்தை... நீங்ககூட இவங்க கட்சில சேர்ந்துட்டீங்க...!! “என்று ஆதங்கத்துடன் ககன் கேள்விமேல் கேள்வி அடுக்க.. பதில்கூற அனைவரும் முழித்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு வழியாக, தாராவின் தந்தை “அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை.. நம்ப காவ்யாதான் நேத்திக்கு ராத்திரி ஏதோ சர்பரைஸ் பிளான் பண்ணி, எங்களுக்கு சொன்னா... உங்க மாமியார்கூட உங்க அம்மாக்கிட்ட பேசினாங்களே... எல்லாரும் சேர்ந்துதான் பார்க்குக்கு வந்தோம்.. மேகன் தம்பியும் சின்ன மாப்பிள்ளையும் தான் எல்லா ஏற்பாடும் பண்ணினாங்க.. இவ்வளோ ஏற்பாடு பண்ணியிருப்பாங்கன்னு எங்களுக்குமே தெரியாது மாப்பிள்ளை..” என்று கூற...

“அதான் நான் கேட்கறேன்.. இவ்வளோ நடந்து இருக்கு.. என்கிட்டே நீங்களும் சொல்லல.. அவங்களும் சொல்லல...”என ககன் மீண்டும் தொடங்க..

பொறுமை இழந்த ககனின் அப்பா... “ககி கண்ணா... உனக்காக தான் சர்பரைஸா எல்லாம் பண்ணி இருக்காங்க.. அப்புறம் மறுபடி மறுபடி ‘ஏன் சொல்லல.. ஏன் சொல்லல...’ன்னு கேட்டா என்னப்பா பண்றது...” என்று கடிந்துக்கொண்டார்.

“சரி அப்பா... சாரி...! ஆனா எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க எல்லாரும்... இவ்வளவு பிளான்ஸ்... அதுவும் எனக்காக...! இது எல்லாம் காவ்யாவும் டாலியும் யோசிச்சு இருப்பாங்கன்னு சொல்றீங்களா...? அதுவும் அந்த மக்கு பசங்கள கூட வெச்சிக்கிட்டு...??” என்று ககன் கேட்டு முடிக்கும் தருணம் உள்ளே நுழைந்தார்கள் மேகன்-டாலி மற்றும் உதய்-காவ்யா.

“அத்தான்.......!!!!”

“அத்திம்.....!!!” என்று ஒன்றுபோல் சத்தமாக ஒலித்தது பெண்ணரசிகளின் குரல்.

‘எப்படி கண்டுபிடிச்சாரு அவர்...!’என்று இருவரும் மெல்ல கூறிக்கொண்டது கூட காதில் விழுந்தது என்பது அவர்கள் அனைவரும் அறிந்த ரகசியம்.

பெண்களின் அதட்டலை இப்படி காதில் வாங்கி அப்படி வெளிவிட்ட ககன், “முக்கியமா, பார்க்குல இவளோ பண்ணனும்னா போலிஸ் பர்மிஷன் வாங்கி இருப்பீங்க... அது அப்பா தான் ஹான்டில் இருப்பாங்க.. ஏன்னா நான் ரெட்டி அங்கிள் பார்த்தேன்.. அப்பாக்காகதான் அவரு வந்து இருப்பாருன்னு இப்போ புரியுது.. அதோட.. இதெல்லாம் மீடியாக்கு தெரிஞ்சா, தேவையில்லாத இஷ்யூஸ்.! இன்னிக்கு ஹாட் டாபிக் இதுவாதான் இருக்கும்...! ஆனா மீடியா ஆளு ஒருத்தரும் இல்ல... இதுவும் ரெட்டி அங்கிள் ஏற்பாடுதான். சோ... கடைசியா நான் சொல்லறது என்னன்னா....“ என்று இழுக்க.. இடையிட்ட உதய்,

“சொல்லுப்பா... மகராசா.. சீக்கரம் சொல்லு.. எனக்கு குளுருது.. நான் போய் டிரஸ் மாத்திட்டு இப்பவே கோவா கிளம்பனும்.. ஊருக்கு போனவன கால் பண்ணி ஆலயவிட்டாங்க உங்க பெரிய...........”என்று ககன் சொல்லி(உளறி) முடிக்கும்முன்... பதறிப்போய், அவனின் காலை, காவ்யா மிதிக்க... கையை, டாலி கிள்ள... முதுகில் மேகனின் கையால் அடி விழுந்தது, பகிரங்கமாக.!! பரிதாபகரமாக..!!!

அவனை காப்பாற்றும் எண்ணமோ என்னவோ.. அதுவரை அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த காவ்யாவின் அம்மா..

“ஐயையோ.. சின்ன மாப்பிள்ளை.. நீங்க ஏன் இப்படி தொப்பலா நனைஞ்சிட்டீங்க..  வந்து துடச்சிக்கோங்க... ஜலதோஷம் புடிக்கப்போகுது..”என்று அவன் கையை பிடித்து இழுத்துப்போனார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.