“அதான்..என்ன காரணம்..??”
“அது உன்கிட்ட சொல்லமுடியாது..நான் வேணாம்னு சொன்னா வேணாம் தான்..”,அவரும் காரமாக..
“அப்படின்னா கேட்டுக்கோங்க..நான் முடிவு பண்ணிட்டேன்..அவர்க்கிட்ட வேலை செய்யனும்னு..”,என்றாள்..
“தியா..”,ரத்தமென கண்கள் சிவக்க விரலை அவள் முன் நீட்டி,”அப்போ நான் சொல்றதை கேக்க மாட்ட..அப்படித்தானே..??”
கண்கள் சிறிது கலங்கினாலும் மனதில் இது உங்கள் மகளுக்காகவும் மருமகனுக்காகவும் என மனதில் நினைத்தபடியே ஆமாம் என்பது போல் தலையசைத்தாள் அவரது பார்வையை சட்டை செய்யாது..
இவளது இந்நடவடிக்கையை எதிர்பாராத அப்பெரியவர் தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்..
அவரிடம் செல் என்று மனம் கட்டளையிட்டாலும் கால்களை இறுக்கமாக நிலைத்தில் ஊன்றியவள் அவரது கண்களை நேராகப் பார்த்து,”நான் நாளைக்கு கிளம்பறேன்..”,என்றாள் அறிவிப்பாய்..
வெற்று பார்வை ஒன்றை மட்டும் அவளுக்கு பரிசளித்தவர் கண்மூடி சேரின் பின் சாய்த்து அமர்ந்து கொண்டார் மௌனமாய்..
இதற்கு மேல் முடியாது என்பது போல் அவரில் அருகில் வந்தமர்ந்தவள்,”தாத்தா..ப்ளீஸ் தாத்தா..புரிஞ்சுக்கோங்க..”,என்றாள்..
“அதான் பாப்பா நானும் சொல்றேன்..சொன்னா புரிஞ்சுக்கோ..”,என்றார் எங்கோ பார்வையை பதித்தபடியே..
“வேற எது வேணும்னாலும் சொல்லுங்க..செய்யறேன்..ஒரு மூன்றே வருடம்..ப்ளீஸ்..”,என்றாள் பிடிவாதமாய்..
அவள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள நேரம் வந்து விட்டது போல் உணர்ந்தவர்,”சரி..நீ எங்கே வேண்டும் என்றாலும் போ..இனி வரும் மூன்று வருடம் உனக்கானது..ஆனால் இந்த மூன்று வருடம் நீ இங்கு வரவும் கூடாது எங்களுடன் பேசவும் கூடாது..”,இதை சொன்னாலாவது இவள் போகாமல் இருப்பாள் என்ற நப்பாசையோடு..
அவரை ஒரு அதிர்ச்சி கலந்த பார்வை பார்த்தவள் மனதை தேற்றிக்கொண்டு,”சரி தாத்தா..இங்க வரமாட்டேன்..”,என்றுரைத்து விட்டு கண்களில் நீருடன் ஓடினாள் தனதறைக்கு தனது தேடலைத் துவங்க..
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}