(Reading time: 10 - 19 minutes)

வெளியே வந்தவன் தன் காரின் கதவினைத் திறந்து ஏறப்போகையில், அருகில் கேட்ட சிறு ஒலி சட்டென அவனுக்கு கோபத்தை உண்டாக்க பட்டென நிமிர்ந்து பார்த்தான் அவன்…

கண்ணாடி வளையலோசை குலுங்கி குலுங்கி தன் இனிய ஒசையை வெளிப்படுத்திட, அந்த வளையலை பூட்டியிருந்த தளிர்க்கரங்கள் காற்றோடு கதை பேசியபடி அசைந்தாட, தன் எதிரே இருந்த தோளின் மீது மோதி மோதி விளையாடியது அக்கரங்கள்…

“இது என்ன நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?....”

கேள்வி தனக்குள் எழுந்த வேளையே, கௌஷிக் தன் காரினுள் ஏறி அமர காலை தூக்கி உள்ளே வைக்க முயன்ற வேளை,

“ஆ… வலிக்குதுடி…. போதும்….” என்ற ஆண் குரல், அக்கரங்களுக்குச் சொந்தமானவளது கரங்களைப் பிடித்து தன் பக்கம் திருப்பிட, கௌஷிக்கின் கால்கள் தானாகவே நின்றது…

அந்த பௌர்ணமி நேரத்தில், பகலின் வான நிறத்தினை புடவையிலும், நிலவொளி தன்னில், மின்னிடும் நட்சத்திரமாய் பூத்திருந்த அவளது அழகிய விழிகளும், அந்த நிலவினையும் தாண்டி மிளிர்ந்து அவளை தேவதையாய் காட்டிட, அவளின் மீது பதித்திட்ட விழிகளை திருப்ப முடியாது அப்படியே நின்றிட்டான் கௌஷிக்…

வளையல்கள் குலுங்கிட, அவள் அந்த ஆண் குரலுக்குச் சொந்தமானவனை செல்லமாய் மிரட்டி அடித்திட, வைத்த கண் வாங்காமல் பார்த்திட்டான் கௌஷிக்…

“போதும்டி அடிச்சது…. யாராவது பார்த்துடப்போறாங்க… வா….” என அவளின் கைப்பிடித்து அந்த ஆண் இழுத்திட, சட்டென திரும்பினாள் அவள்…

திரும்பியவளது பார்வை, கௌஷிக்கிடம் எதேச்சையாய் வந்து நிற்க, அவனின் விழிகளை சந்தித்தாள் அவள் எதிர்பாராதவிதமாக…

அவள் விழி அவனிடம் வந்து சேர, அவன் கண்கள் சற்றே விரிந்து அதனை உள்வாங்கிட, அவளுக்கோ அவனிடத்தில் செலுத்திட்ட பார்வையை திரும்பி அவளிடத்தில் எடுத்துக்கொள்ள முடியாது போனது…

தன் கரங்களைப் பிடித்திருந்த அந்த ஆண் இழுத்த வேகம் தாங்காது தன்னுடன் வந்தவன் பின்னாலேயே வேகமாய் செல்ல, வேகத்தில் காற்றில் அவளது கூந்தல் சட்டென விரிந்து அவளின் பின்னேயே செல்ல, வண்ண மயில் ஒன்று தோகை விரித்தாடி செல்வது போல் இருந்தது கௌஷிக்கிற்கு…

உள்ளே செல்லும் வரை அவளையே பார்த்திருந்தவன், எப்போது சுயநினைவு கொண்டான் என்றே தெரியாது திடுக்கிட்டு விழித்திட, சட்டென தான் நிற்கும் இடம் உணர்ந்து காரில் ஏறி கதவை சாற்றிக்கொண்டு ஸ்டியரிங்கில் தலைசாய்த்து படுத்துவிட்டான் கண் மூடியபடி…

மூடிய கண்களுக்குள் சற்று முன் பார்த்தவளின் தோற்றம் வந்து போக, “நோ……” என்ற அதிர்ச்சியோடு காரின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்திட, அதிலும் அவள் தளிர்க்கரங்களோடு கூடிய வளையல்களே வந்து போக, பேரதிர்ச்சியோடு செய்வதறியாது ஒரிரு விநாடிகள் அப்படியே உறைந்து போனான் கௌஷிக்…

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.