“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லையா.... நமக்கு ரொம்ப நாளா கொடைச்சல் கொடுத்துட்டு இருந்தானே அந்த பாத்திரக் கடை முருகேசு, அவன்தான் ஆளுங்களைவிட்டு இந்த மாதிரி பண்ண வச்சுட்டான்னு சொல்ல வச்சுடலாம்.....”
“சார் அது எப்படி சார் முடியும்... இவனுங்க அந்த ACP கைல மாட்டும்போது வேற மாதிரி சொல்லி இருக்காங்க... இப்போ இப்படி சொன்னா நாம பொய் சொல்றது தெரியாதா...”
“அதுக்குத்தான் நம்மாள் இன்ஸ் இருக்கானே.... ரெண்டு தட்டு தட்டின உடனே உண்மைய சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுவான்.... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.... அந்தக் கேஸ்ல நாம வெளிய வந்திடுவோம்.... அந்த முருகேசுப்பய மாட்டிப்பான்....”
“சூப்பர் சார்.... சரி அடுத்து நான் என்ன பண்ணனும்......”
“நீ சொன்னபடியே செய்துடுவோம்... அடுத்த புதன்கிழமை கேஸ் கோர்ட்க்கு வருது... அன்னைக்கு நடக்கறதை வச்சு நாம அடுத்து என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்...”
“சரி சரி நான் கிளம்பறேன்... எதுக்கும் நான் அந்த ரெண்டு வக்கீலையும் தொடர்ந்து கண்காணிக்கிறேன்..... வேற எதுனாச்சும் தெரிஞ்சுதுன்னா உங்களுக்கு போன் பண்றேன்...”,நாராயணனிடம் விடைபெற்று கிளம்பினான் நட்டு...
புதன்கிழமை கோர்ட்டில் சந்திரனிடம் இவர்கள் மாட்டப் போகிறார்களா... இல்லை சந்திரன் இவர்களிடம் மாட்டப்போகிறாரா பார்க்கலாம்.
தொடரும்
{kunena_discuss:1100}