(Reading time: 24 - 48 minutes)

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினாள் மாது

அதனால் அதை பார்த்துக் எடுத்துக் கொண்டிருக்க  அப்பொழுது கதவை திறந்துக் கொண்டு அஸ்வின் உள்ளே வந்தான். கதவு திறக்கும் சத்தத்தில் கவி திரும்பினாள்.

imageஅதுவரை  கழட்ட முடியாத பின் கழண்டுக் கொள்ள அவளது சேலை விலகி விழுந்துப் போக  அதைப் பார்த்தவள் அவசர அவசரமாக சேலையை எடுத்து தனது தோள்களில் போட்டுவிட்டு அவள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்

ஒரு மின்சாரப்பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டு கொண்டேன்

அவனோ அவளை தனது லேசர் கண்களால் அணுஅணுவாய்  ரசிக்க அவனது அந்த பார்வையில் அவளது மேனி முழுவதும் சிவந்தது...

சில நொடிகள் என்றாலும் பெண்மையின் செழுமையை பார்த்த அவனால் தனது உணர்வுகளை அதற்கு மேல் கட்டுபடுத்த  முடியவில்லை காலையிலிருந்து பேயாட்டம் போட்ட அவனது மனது இப்பொழுது முழுவதுமாக அவன் வசம் இழந்து போக அவனது இளமை முழித்துக் கொள்ள ஆரம்பித்தது...

அவனும் மனிதன் தானே அதுவும் மனது முழுவதும் தன்னவள் மீது காதல் கொண்டு இருப்பவனுக்கு..,இன்று அவள் தந்த ஒரு அணைப்பும்,அவளது கண்ணீரும் அவனுக்கு அவன் மீது அவள் வைத்திருக்கும் காதலை உணர்த்திவிட...,

அவன் பார்த்து தேர்ந்தெடுத்த சேலையில் அழகு பதுமையாய் நின்ற தனது மனைவியை நோக்கி முன்னேற தொடங்கினான்..

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டு கொண்டேன்

கதவை  சாத்தியவன் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளை நோக்கி வர..,அதை அவனது காலடி சத்தத்திலே உணர்ந்தவள்  மனதில் பல உணர்வுகள் அவளது நெஞ்சம் தாறுமாறாய் துடிக்க

ஆரம்பித்தது அதிலும் அவள் நெஞ்சில் நெருஞ்சு முள்ளாய் இருக்கும் அந்த விஷயம் அதை அவனிடம் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று நினைத்து அவனை பார்க்க

(பாவி மக கேக்க வேண்டி தான...நான் இன்னும் முணு எபில  கதைய முடிச்சிட்டு போய் இருப்பேன் ல..,இப்ப பாரு  இன்னும் ஆறு எபிக்கு மேல போக போகுது...கதை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆக போகுது..,இதுங்க ரெண்டும் பண்ற அலும்பாலதான் என்னால கதை முடிக்க முடியல பாஸ்..., ஸ்டாப்...ஸ்டாப்...நீங்க திட்டுறது கேக்குது என்னைக்கி நீ மூணு பேஜ்கு மேல போட்டுருக்க

அது தான கேட்டுடுச்சு..கேட்டுடுச்சு...

இந்த சின்ன பொண்ண மன்னிச்சு விட்டுடுங்க...,இவ்வளவு பெரிய டயலாக் இவ ஏன் போடுறானு யோசிகிறிங்களா..,அவ்வளவு கஷ்ட பட வேண்டாம் இப்போதைக்கு நான் கதைய முடிக்க போறதுயில்லைனு சிம்பாலிக்கா சொல்லுறேன்...யாரும் கதைய மறந்துடாதிங்க...

நோ..நோ...வன்முறை வேணாம்..,நீங்க முறைக்கிறது தெரிது..நான் என்ன பண்ண...

மீ பாவம்...உங்கள தான் நம்பி இருக்கேன்....இப்ப நான் எஸ்கேப்...சாரி பார் த டிஸ்ரபன்ஸ்..)

அவனது கண்களில் தெரிந்த காதலில் அவளால் எதுவும்  கூற முடியவில்லை

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

ஒன்றை இழந்து விட்டாள் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நனைவா

என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னை பார்த்தெந்தான் தாய்மொழி மறந்தேன்

aeom

அவளது அருகில் அவன்  வர வர அவள் பின் நகர்ந்து போனாள்..,அவனது ஒவ்வொரு அடிக்கும் அவள் நகர்ந்து நகர்ந்து சென்று கபோர்ட்டில் மோதி நிற்க அவளது அருகில் வந்தவனது  மூச்சுக்காற்று அவளது மீது விழ அவனது சூடான மூச்சு காற்று பெண்ணவளை இன்னும் சோதித்து...

அவளது வெற்றிடையில் கை போட்டவன் அவளை தனது அருகில் இழுத்தான்.அவளது உதடுகளுக்கும் அவனது உதடுகளுக்கும் இருந்த இடைவேளைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தவன் அவளது இதழில் கதை எழுத தொடங்கினான்...

அவள் மூச்சுக்கு தவிக்க அவளது இதழ்களை விட்டவன் அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டு தங்களது மஞ்சத்திற்கு சென்றான்.

அவளை மஞ்சத்தில் கிடத்தி அவளது இதழ்களை மீண்டும் அவன் சிறைபிடிக்க...

அவளது பெண்மையில் அவனது வன்மையை எழுத..,இது நாள் வரை அவனுக்காக காத்து வைத்த பெண்மையை அவள் அவன் கைகளில் ஒப்படைக்க அவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்...

காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்க அப்பொழுது தான் முழித்தான் அஸ்வின்.

தனது மார்பில் குழந்தையென படுத்திருந்த மனைவியை பார்த்ததும் நேற்று நடந்த அனைத்தையும் நியாபகம் படுத்த நேற்றைய நினைவில்  அவனது மனதில் சந்தோஷம் ஊற்றெடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.