“யார் நீங்க..?? என்ன வேண்டும் உங்களுக்கு..??”,என்று கேட்டாள் நிஷார்த்திகா..
“எங்களுக்கு நீ தான் வேண்டும்..”,தள்ளாடியே படியே ஜன்னல் அருகில் வந்து குழறிய படி மொழிந்தனர் மூவர்..
மூவரின் தோற்றத்தைக் கண்டு அருவருத்து ஓரெட்டு பின்னால் வைத்தவள்,”முதலில் இங்கிருந்து போங்க..”,என்று சத்தமிட்டாள்..
“நாங்க இங்க தங்கலாம்னு வந்தா நீ என்ன போகச் சொல்ற..??”,என்று எகிறினான் ஒருவன்..
அவர்களைக் காண சகிக்காமல்,”இப்போ இங்க இருந்து போறீங்களா..இல்லை போலீசைக் கூப்பிடவா..??”,என்று கேட்டாள்..
“போலீசா..??”,ஏதோ ஜோக்கைக் கேட்டது போல் சிரித்தவர்கள்,”என்னன்னு கம்ப்ளைன்ட் குடுப்ப..??”,என்று கேட்டனர் லஜ்ஜையின்றி..
அவர்களிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் ஜன்னலை மூடி விட்டு பாலை சூடு செய்து குடிக்க ஆயத்தமானாள்..
முகத்தில் அறைந்தார் போல் ஜன்னலை சாதியவளைக் கண்டு கோபமுற்ற இருவரும் கற்களை ஜன்னலில் விட்டெறிந்தனர்..
ஜன்னல் கதவு இரும்பென்பதால் சத்தம் மட்டுமே அவர்களுக்கு பதிலாய்..
குடிபோதையில் ஆக்ரோஷம் தலைக்கேற கதவை தட்டத் துவங்கினர் பலமாக..
இவர்களின் செயலில் கோபம் கொண்டாலும் தனது ஒருத்தியால் மூவரையும் கையாள முடியாது என்பதறிந்து சற்று பயத்துடன் தனது ரூமில் முடங்கினாள் காதுகளைப் பொத்தியபடி..
சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டும் ஓசை அதிகாமானது நிஷார்த்திகாவின் கண்களிலிருந்து வழியும் நீரைப் போல..
பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் சமையலறை சென்று ஒரு கையில் மிளகாய் பொடியையும் மறு கையில் மிளகுப் பொடியையும் எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தாள்..
அந்நொடி கூச்சல் போட்டுக்கொண்டிருந்த ஒருவன் அவள் காலடியில் வீழ்ந்தான் நெற்றியில் இரத்தம் சிந்தியபடி..
வணக்கம் நண்பர்களே..
தாரிகை..
மூன்று மாதங்களுக்கு முன் மனதில் தோன்றிய கதைக் கரு.. இப்பொழுது உங்களது முன் எழுத்து வடிவமாக..
இவள் உங்களை ஈர்ப்பாள் என நம்புகிறேன்..
உங்களது கருத்துக்களுக்காக I AM WAITING..
நன்றி..!!
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}