(Reading time: 7 - 14 minutes)

“எப்போ டா.. என்ன பண்ண?..”

“ஒன்னும் இல்லை.. first நைட் நேரத்துல அடிக்கடி  அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி doupt கேக்கற மாதிரி கால் பண்ணேன்.. அது புகழ் கிட்ட அவ பேசுற நேரம்.. புகழ் போலீஸ் என்பதால அவனுக்கு ப்ரீ டைம் அதிகம் கிடைக்காது.. நைட் தான் பேசுவான், அதே நேரம் அவ பேசும் போது நான் கால் பண்ணா அவன் போன்னை கட் பண்ணிட்டு என்கிட்டே பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்.. முதலில் அவங்க டைம் ஸ்பென்ட் பண்றதை குறைக்கணும்... அதை தான் நான் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.. அவங்க எப்போவாவது சண்டே மீட் பண்ண பிளான் பண்ணுவாங்க.. அன்னைக்கு ஏதாவது பிளான் பண்ணி நான் அவங்களை பார்க்க விடாமல் செய்வேன்.. இப்போ பக்கமா மித்ராவுக்கு பீவர் வந்தப்போ நான் தான் அக்கறையா அவளை hospital கூட்டிட்டு போனேன்.. அவளை புகழ் கிட்ட பேசவே விடலை.. அவனுக்கு லேட்டா தான் இது தெரிந்துருக்கும்.. அநேகமா இப்போ அவங்களுக்குள்ள சின்ன உரசல் ஏற்பட்டிருக்கும்.. நாளைக்கு அதுவே பெரிய பிரச்சனையாய் மாறும்..” என வெறியோடு சொல்பவனை பார்த்து திகைத்தான் திலக்...

ஆம் உண்மை தான்.. மித்ரா-புகழ் இடையே சிறிதாய் சண்டை முளைத்தது தான்.. ஆனால் அது வந்த வேகத்திலே காணாமல் போனதே.. இருவரிடையே புரிதல் இருந்தால் அவர்கள் காதல் அவர்களை தானாய் சேர்க்குமே... இது பரத்திற்கு தெரிய வாய்ப்பில்லை தான்...

அம்மு இவ்வளவு சொல்லியும் மித்ரா அமைதியாய் இருப்பதை கண்டு அம்முவுக்கு கோபம் வந்தது..

“என்ன சங்கு அவன் மேல உனக்கு அக்கறை இல்லையா..”

“அக்கறை படுறதுக்கு எனக்கு அவன் யாரு?... என்னை என்ன செய்ய சொல்ற அம்மு.. அவன்தான் லூசு தனமாய் பேசுறான்.. அதுக்காக நீ வருத்தபடுற... நானும் வருத்தபடலன்னு வேறு நீ சொல்றே.. இது நியாயமா..”

“என்ன இருந்தாலும் அவன் நம்முடைய பிரண்ட்..”

“உனக்கு மட்டும் தான் அவன் பிரண்ட்.. என்னை அவன் பிரண்டா நினைக்கலை..”

“அவன் காதல் உண்மையானது.. அவனால் உன்னை மறக்க முடியலை, பாவம்..”

“அதற்காக நான் புகழை விட்டுட்டு அவனை லவ் பண்ணனுமா..”

“நான் என்றும் அப்படி உன்னிடம் கேட்க மாட்டேன் சங்கு.. எனக்கு நீ தான் first.. அது உனக்கே தெரியும்...”

“அது எனக்கும் புரியுது.. ஆனா அவனை மட்டும் யோசிக்காத.. என்னையும் புகழையும் சேர்த்து யோசி.. ஒன்னு மட்டும் நினைவில் வை.. எனக்கு நீயும், புகழும் மட்டும் தான் முக்கியம்.. வேறு யாரும் எனக்கு மூன்றாம் மனிதர் தான்..” என்றவள் வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்..

நாளுக்கு நாள் பரத் மித்ராவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க முயற்சி செய்ய, அம்மு அவனை ஒருவாறு கவனிக்க ஆரம்பித்தாள், அவனுக்கு தெரியாமல்,

அம்முவிடம் அவன் சோகத்தை பெரிதுபடுத்தி காண்பிக்க, அதை ஆமோதிப்பதை போல் இவளும் நடந்து கொண்டாள்.. ஒருவாறு அவன் செய்ய வருவதை யுகித்திருந்தாள்... ஆனால் அது தவறாகும் பட்சத்தில் அவன் மனது கஷ்டப்படும் என்று நினைத்தவள், அவனை பற்றி ஒரு தெளிவான முடிவு வரும் வரை அவனுக்கு சப்போர்ட் செய்வது போல் நடிக்க, அதுவே விக்ரம்-அம்மு பிரச்சனைக்கு காரணமாகியது..

அம்முவுக்கு அவன் நடிப்பது தெரியும் வரை அவன் எண்ணங்களை தெரிந்து கொள்வதற்காக அவன சொல்வதை கேட்பது போல் நடந்து கொண்டாள்.. அப்போது தான் விக்ரம் தனது வேலை முடிந்து சென்னை வந்தான்..

அப்போது கல்லூரியின் கடைசி செமஸ்டர்.. பரத்தின் வேலைகளை தெரிந்துகொண்டவள் அவனுடன் நேரடியாக பேசவும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்த அவன், மறுகணமே அதை ஒத்துகொண்டது மட்டும் இல்லாது  நேரடியாக மிரட்டவே ஆரம்பித்தான்..

“நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அம்மு.. மித்ராவையும் விக்ரமையும் நீதான் சாமாளிக்கனும்.. என்னைத்தான் மித்ரா லவ் பண்ணனும்.. இன்னும் ஒன் வீக்ல காலேஜ் முடிந்ததுடும் அதுக்கு அடுத்த நாளே அவ என்னை register marriage பண்ணனும்.. இல்லைனா உன் விக்ரம்மை உன்னுடன் சேர விட மாட்டேன்.. நான் என்ன வேணாலும் பண்ணுவேன்... mind it” என்றவன் வேகமாக அங்கிருந்து செல்ல அவனையே முறைத்து பார்த்திருந்தாள் அமிர்தா...

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.