(Reading time: 21 - 42 minutes)

இந்த வீடியோ வெளியானால் அவமானம் அதனால் கட்சி தலைமை இடத்தில் தான் பதில்வேறு சொல்லவேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தால் ஆதித்தை ஏதாவது செய்து முடக்குற வரை இதுபோல் சில்லறைத்தனம் பப்ளிக்கில் செய்வதை நிறுத்தச்ச்ல்லி எச்சரித்து தன மகனை வைத்திருந்தான் மினிஸ்டர் காந்தன். இந்த நிலையில் அந்த வீடியோ வெளிவந்தால் அதை ஆதித்தான் செய்தான் என்ற பழி ஏற்படும் அதற்காக அந்த மினிஸ்டர் பழிவாங்கும் செயலில் ஆதித்தின் அன்பு மனைவி பாதிப்பின் விளிம்புக்கு போகக்போவதை ஜேம்ஸ் அப்பொழுது உணரவில்லை .

றுநாள் காலை ஆறுமணிக்கே ஆதித் எழுந்துவிட்டான் இரவு முழுவதும் தூங்காமல் விடிகாலையில் கண் அசந்த அழகுநிலா ஆறுமணியானதை உணராமல் தூங்கிகொண்டிருந்தாள். அன்று அழகுநிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுபதற்காக அழகியின் அண்ணன் குமரேசனிடம் போனில் தொடர்புகொண்டு தான் அவனை பார்க்க விரும்புவதாகவும் அவனிடம் பேசவேண்டும் என்று கூறியும் மேலும் அழகி உங்களை பார்த்தால் சந்தோசப்படுவாள் அதற்காக நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் உங்களிடம் நான் பேசவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தான்.

இன்றுகாலை ஆறுமணிக்கு ஸ்டேசன் வருவதாக குமரேசன் கூறியிருந்ததால் அவனை பிக்கப் செய்வதற்காக எழுந்தவன் அவசர அவசரமாக கிளம்பி ஸ்டேசன் சென்றான் ஆதித் .

ஆதித்தே தன்னை பிக்கப் செய்ய வந்திருப்பதை பார்த்த குமரேசன் ஆச்சரியமடைந்தான் அதனை அவனிடம் காண்பிக்காமல் விரைப்புடனே அவனை நோக்கிவந்தான். .

கெத்தாக எப்பொழுதும் இருக்கும் ஆதித்தோ அழகுநிலாவிற்காக தன கம்பீரத்தை குறைத்துக்கொண்டு அவனே வழிய சிரிப்புடன் வாங்க குமரேசன் என்று கூறியபடி அவனிடம் பார்மலாக கைகுலுக்குவதற்கு கை நீட்டினான்.

அவனின் உயரம் தெரிந்த குமரேசனுக்கு அதற்குமேல் அவனிடம் முகம்திருப்ப முடியவில்லை மேலும் அப்படி என்னதான் தன்னிடம் சொல்லநினைகிறார் என்பதனை அறிய ஆர்வமாகவும் இருந்தான். எனவே பதிலுக்கு அவனின் கையை பற்றி குலுக்கியவன் எப்படியிருகிறீங்க உங்க வொய்ப் நல்ல இருகிறார்களா? என்று கேள்விகேட்டான்.

என் தங்கை எப்படியிருக்கிறாள் என்று கேட்காமல் உங்கள் வொய்ப் எப்படியிருக்கிறாள் என்று கேட்ட அவனை பார்த்தபடி என் வொய்ப் நல்லா இருக்கிறாள். ஆனால் உங்களில்ன் தங்கையாக அவள் சந்தோசமாக இருகிறாளா என்று பார்த்தால் அதற்கு பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

மேலும் உண்மை என்னவென்றால் இப்பொழுது அறிமுகமான என்னாலேயே அழகிக்கும் தவறுக்கும் சம்மந்தமே இருக்காது என்பதை தெளிவாக உணரமுடிகிறதே ஆனால் பிறந்ததில் இருந்து அவளை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் எப்படி அவளின் செயலில் தவறு இருக்கும் என நம்பி அவளிடம் ஏன என்று விளக்கம் கூடகேட்காமல் உங்களால் அவளை தள்ளிவைக்க முடிகிறது.

ஆனால் என்னால் என் மனைவியை பற்றிய உங்களின் தவறான என்னத்தை போக்காமல் இருக்கமுடியவில்லை அவள் பிறந்த வீட்டின் உதாசீனத்தை தாங்கமுடியாத தவிப்பை போக்குவதற்கு என்ன நடந்தது என்பதை உங்களிடம் கூறி உங்களின் அன்பை திரும்ப அவளுக்கு மீட்டுக்கொடுப்பதை நான் அவளுக்கு செய்கிற கடமையாக நினைத்துதான் உங்களை இங்கு வரவழைத்தேன் என்று கூறியபடி காரை ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான். ஒரு காபி குடித்துகொண்டே பேசலாம் பேசிமுடித்தபின் உங்களுக்கு உங்களின் தங்கைமேல் தவறு இல்லை என்று நம்பிக்கை ஏற்பட்டால் அதன் பின் அவளை பார்க்க என்னுடன் என் வீட்டிற்கு வந்து என் வொய்பை பார்க்கலாம் என்றான்

அவன் பேசப் பேச குமரேசனுக்கு நானும் அம்மாவுடன் சேர்ந்து அவசரப்பட்டு அழகுநிலாவை ஒதுக்கிவிட்டோமோ! அவளிடம் ஏன இப்படி குடும்ப மானம் போகும்படி சம்பந்தம் பேசிய வீட்டின்முன் அவமானத்தை ஏற்படுத்தினாய்? உனக்கு மாப்பிள்ளை பார்த்து ஆசையாசையாய் கல்யாணம் செய்யணும் என்ற நினைப்பை உடைத்து நீயே உனக்கு மாப்பிள்ளை பார்த்தாய்? என்று மனம் விட்டு பேசியிருக்கனுமோ! என்று காலம் கடந்து யோசித்தபடி அவனுடன் காபி ஷாப்பிற்குள் நுழைந்தான்.

----தொடரும்----

Episode 23

Episode 25

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.