“அப்படி தான் சொல்வாங்க...”
“எங்க ஊருல அப்படி சொல்ல மாட்டாங்க... ஆமாம் இட்லி பூ இருக்கே, தோச பூ இல்லையா... ஹா ஹா ஹா...!”
இருவரும் நேரம் போவதே தெரியாமல் பூ கதை, ஊர் கதை, உலகத்து கதை எல்லாம் பேசினார்கள்...
மாலை ஆனதன் அறிகுறியாக மெல்ல சூரிய ஒளி குறையவும், விசாலினி சுதாரித்துக் கொண்டாள்.
“ரொம்ப நேரமா பேசிட்டு இருந்துட்டோம்... வா வீட்டுக்கு போவோம்...” என்றாள்.
ரச்னாவும் மறுப்பு சொல்லாமல் எழுந்துக் கொண்டாள்.
வழியில் தெரிந்த செடிகள், மரங்கள் மட்டுமல்லாமல், ஆடு, பசு மாடு என அனைத்தை பற்றியும் கதை அளந்தபடி இருவரும் வீட்டை அடைந்தார்கள்!
பள்ளியில் இருந்து வந்திருந்த வித்யாவும், சத்யாவும் அம்மா இல்லாத தைரியத்தில் பள்ளி சீருடையிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ru" href="/stories/tamil-thodarkathai-all-list/11129-malaiyoram-veesum-katru-bindu-vinod-16" rel="alternate">Episode # 16
{kunena_discuss:972}