"ஆமால்ல. நீங்க சொல்ற காரணத்துக்கு தான் எனக்கு கோபம் வந்துருக்கு. நீங்க எனக்கு தான அத்தான். அவளுக்கு எல்லாம் இல்லைல. அவ எப்படி உங்களை அப்படி சொல்லலாம்? நீங்க என்னோட அத்தான்"
"ஆமா டி செல்ல குட்டி, நான் உனக்கு தான் அத்தான். உன்னோட புருஷன் மட்டும் தான் போதுமா? அவ சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத. சின்ன பொண்ணு. அவளை அப்படி வளத்து வச்சிருக்காங்க. கொஞ்ச நாள்ல அவ மாறிருவா. சரியா?"
"ஹ்ம்ம்"
"சரி கலை, நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நினைச்சேன்"
"என்ன அத்தான்?"
"அப்ப பல்லியை விரட்டும் போது நான் கொடுத்த முத்தம் உனக்கு புடிச்சிருந்ததா?"
அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் மார்பிலே முகம் புதைத்தாள் கலைமதி.
அதை ரசித்தவன் "என்னடி வெக்க படுற? பதில் சொல்லு. அப்ப என்ன நினைச்ச?", என்று கேட்டான்.
அவன் மார்பில் முகம் புதைத்த படியே "சீக்கிரம் காலேஜ் முடியணும்னு நினைச்சேன்", என்றாள்.
"வாவ், நிஜமாவா? நீயாடி அப்படி எல்லாம் நினைச்ச? நம்ப முடியலையே? சரி செல்லம் எதுக்கு அப்படி நினைச்சீங்க?"
"அதுவா?"
"ம்ம்"
"அதுவந்து... நீங்க செய்றது பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்குனு தெரியுது? ஆனா நான் காலேஜ் முடிக்கலைன்னு தான சாரி எல்லாம் சொல்றீங்க? முடிஞ்ச அப்புறம் என்ன செஞ்சாலும் சாரி சொல்ல மாட்டிங்கள்ல? அதான். நீங்க அப்படி எதாவது செஞ்சிட்டு சாரி கேக்கும் போது எனக்கு எப்படியோ இருக்கு அத்தான். அது மட்டும் இல்லாம நீங்க என் கிட்ட வரதும் எனக்கு பிடிச்சிருக்கு", என்றாள்."
"முழுசா வளரலைன்னாலும் கொஞ்சமே கொஞ்சம் வளந்துட்ட கண்ணம்மா. முத்தம் கொடுத்தே உன்னை மாத்திருவேன் போல?", என்று சொல்லி சிரித்தான்.
எந்த மனைவியும் என்னை தொடுறது பிடிச்சிருக்கு என்று கணவனிடம் கூற மாட்டாள். மனதுக்குள் அந்த நினைப்பு இருந்தாலும் அதை வெளியே கூற மாட்டார்கள். ஆனால் வெகுளியாக அதை கூட சொல்லும் தன் மனைவியை பார்த்தவன் "இன்னைக்கு உள்ள கோட்டா இன்னும் ஆரம்பிக்கலை", என்று சொல்லி அவளுடைய உதடுகளில் தன்னுடைய உதட்டை பதித்தான்.
அதே நேரம் ஆபிஸ்க்கு கிளம்பி முடித்த ஷியாம் பிரகாஷ் இன்னும் நேரம் இருப்பதால் சோபாவில் அமர்ந்து சூர்யா அனுப்பிய போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தான்.
ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டே வந்தவனுக்கு ஒரு போட்டோவை விட்டு அங்கே இங்கே பார்வையை திருப்பவே முடிய வில்லை.
கலைமதி அருகில் காவ்யா நின்றிருக்கும் போது எடுத்த போட்டோ தான் அது. சூர்யா கூறியதை வைத்தும், மதி முகத்தில் இருந்த சந்தோஷமும், சூர்யா முகத்தில் இருந்த சிரிப்பையும் பார்த்தவனுக்கு இவ தான் அந்த காவ்யா என்று தோன்றியது.
தோன்றியது மட்டும் அல்லாமல் அவளை பார்த்து மதி மயங்கியும் போனான். கண்கள் கூட சிரித்து கொண்டிருந்த அவளுடைய முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ அவள் அவனுடையவளாகவே தோன்றினாள்.
மெய் மறந்து அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் இருந்த புகை படங்களை எல்லாம் மறுபடி மறுபடி பார்த்தான்.
பின் நடப்புக்கு வந்தவன் "லூசா டா நீ? யாருன்னே தெரியாத பொண்ணை இப்படி பாத்துட்டு இருக்க? அவளுக்கு லவ்வர் கூட இருக்கலாம். தேவை இல்லாம மனசை அலைபாய விடாத. வேலையை தவிர சொந்தங்களுக்கு மதிப்பு கொடுத்தா நீ நிம்மதி இல்லாம தான் இருக்கணும். கடைசி வரைக்கும் உனக்கு வேலை மட்டும் தான் துணை", என்று தனக்குள் கூறி கொண்டு எழுந்து கொண்டான்.
ஆனால் சில நிமிடங்களிலே காவ்யா முகம் மட்டும் கொண்ட போட்டோ அவனுடைய போனில் ஸ்கிரீன் பிக்ச்சராக வைக்க பட்டிருந்தது.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}