(Reading time: 20 - 40 minutes)

அவன் கைவண்ணத்தில் அவனுக்கு பிடித்த வகையில் மாற்றியமைக்க பட்டிருந்ததில்.... ரூபினும் ஜெய்யும் காலேஜ் மரத்தடியில் உட்கார்ந்திருக்க.... ஜெய் இவளை காதலிப்பதாக நடிப்பதாகவும் இவளை பழிவாங்க போவதாகவும் சொல்ல... அதிர்ந்து போனாள் சரயூ. 

ஜெய்யின் காதல், தன்னை பழிவாங்க நிகழ்த்திய நாடகமென தெரிந்ததும் வெடித்து சிதறியது இவள் காதல் மனது.  எரிமலையாய் குமுறிய இதயத்தை அதன் போக்கிலியே விட்டுவிட்டாள்.  ஒரே நாளில் அவள் மட்டும் எத்தனை அதிர்ச்சிகளை தாங்குவாள்... மயங்கியிருந்தாள் சரயூ!             

மயக்கமும் தூக்கமும் தெளிந்து எழுந்து கொண்ட சரயூவை, இங்கு நடந்தவைகளை யாரிடமும் பகிரவிடாதிருக்க தேவையான அனைத்து வகையான இமோஷ்னல் ப்ளாக்மைலையும் செய்து தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.  அதன்படி அவளும் செயல்பட அன்றே பெங்களூருக்கு பயனபட்டாள். 

என்னதான் ஜெய்யை அடைய இவள் தடையாக இருக்கிறாள் என்றாலும் யஷ்விதாவால் ஒரு பெண்ணாக அவளுக்கு துணை நிற்க மட்டுமே முடிந்தது.  மாதங்கள் கடந்திருக்க இருவரும் உற்றத் தோழியராக மாறியிருக்க... வேதிக்கும் அவ்வப்போது சரயூவிடம் ஃபோனில் பேசிக்கொண்டு, அவளை தன் கட்டுபாட்டிலிருக்க பழக்கியிருந்தான்.

ன்ன சரயூ என்னோட மாஸ்டர் ப்ளானை கேட்டு அசந்து போயிட்டியா? இருக்காதே! சோர்வா தானே இருக்கனும்... அப்படிதானே இருக்கு? கையை காலை அசைக்க முடியாதே... ஹூம்..அப்படிதா இருக்கும்... ஏன்னா நீ குடிச்ச காஃபி அப்படி! ஆனா உன்னால பேச முடியும்.  கடைசியா ஏதாவது சொல்ல ஆசைப்படுறியா?” என்று கேட்டவனின் கையிலிருந்த துப்பாக்கி அவளின் இறுதியை முடிவுசெய்ய தயாராகியிருந்தது.

“சஞ்சு, ஐ ம் சாரி! உன்னோட காதலை புரிஞ்சுக்காம என்னவெல்லா செய்துட்ட.... நானொரு முட்டாள் சஞ்சு! என்னை மன்னிச்சிருடா....உனக்கு செய்த பாவத்துக்கு எனக்கிந்த தண்டனை தேவைதா” என்றவள், “என்னை கொன்னுடு வேதிக்” என்று விரும்பி மரணத்தை ஏற்றாள்.

அவள் கடைசி வார்த்தையை உதிர்த்த கணம் அவளருகே அமர்ந்திருந்தான் ஜெய்.  அவனைக் கண்டதும் கண்களில் காதல் மின்ன, “ஐ ம் சாரி சஞ்சு!” என்றவளின் குரலில் இவனுடைய உயிர்த் துடித்ததென்றால்

“நானுக்கு சரியான பார்ட்னரில்லை... உன்னோட காதலுக்கு தகுதியில்லாதவ” அத்தனை வலியும் வேதனையும் நிறைந்திருந்த அவள் வார்த்தைகளில் பதறிப் போனான் ஜெய்.

அவனை சற்றும் எதிர்ப்பார்க்காது திகைத்த வேதிக், “வாடா...வா! அவளுக்கு ஒன்னுன்னா சரியா வந்துருவியே? அதெப்படிதா உனக்கு தெரியுதோ? ஓ... இதுதான் உண்மைக் காதலோ? ஏதோ ஒன்னு, ரெண்டு பேரும் சேர்ந்து சாவுங்க”

சரயூவின் சோர்ந்த தோற்றத்தில் அவளின் நலத்தை பரிசோதித்து கொண்டிருந்தவனோ வேதிக்கின் வார்த்தைகளை கவனிக்கத் தவறினான்.

அடுத்த நொடி குண்டு வெடித்த சத்தம் அந்த மாளிகையில் எதிரொலிக்க... சரயூவின் கண்கள் மூடிக்கொண்டன.

கதையோட மிக முக்கியமான எபி இது.  படிச்சிட்டு எல்லா லாஜிக்கலி சரியா இருக்கா? ஏதாவது மிஸ்ஸாகியிருக்க? அப்படியிருந்தா ப்ளீஸ் சொல்லுங்க அப்பதா அதை அடுத்த எபி-ல சேர்க்க முடியும்.  சரயூவோட வ்யூஸ் அண்ட் தாட்ஸ் அடுத்த எபி-ல தான் இருக்கும்.

Episode 31

Episode 33

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.