(Reading time: 14 - 28 minutes)

“ஏய் டீச்சரம்மா இன்னைக்கு என்ன ஆனாலும் உன் குட் மார்னிங் எனக்கு வேணும்..அதுவர நகர மாட்டேன்..”என அவளை பார்த்தவனின் கண்கள் அவன் பேச்சின் தீவிரத்தை உணர்த்தியது.

மென்குரலில்,”நா போகணும்..”

முடிஞ்சா போய்க்கோ என அவன் அசராமல் நிற்க வேறு வழியின்றி தவித்தவள் தன் விரலால் அவன் முகத்தை லேசாய் திருப்பி சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து குட்மார்னிங்  என்றாள் உள்ளே சென்று விட்ட குரலில்..

“ஹா இதெல்லாம் ஒரு குட் மார்னிங் இதுக்கு இவ்ளோ நேரம் இப்படி ஒரு சீன்..ம்ம் போ போய் வேலையை பாரு..”,என்றவன் அசால்ட்டாய் அவளுக்கு வழிவிட்டு நகர்ந்து நிற்க பெண்ணவளுக்கோ அத்தனை கடுப்பையும் மீறி புன்னகை எட்டிப்பார்த்தது.

“மிரட்டல திட்டல சண்டை போடல ஆனா தான் நினைச்சதெல்லாம் செய்ய வைக்குறான் கேடி..”,என மனதில் முணுமுணுத்தவாறே சென்றவளை பின்னிருந்து ரசித்திருந்தான் அவளவன்.

இந்த சின்ன சின்ன சீண்டல்கள் நண்பர்களை கடந்த, தம்பதிகளுக்கு முந்தைய ஒரு நிலை தான் இருவருக்கும்.சொல்லப் போனால் அது ஒரு தெவிட்டாத அழகிய நிலை தானே.அனைத்து உரிமையும் இருந்தும் இல்லாத ஒரு நிலை..எல்லைகள் தாண்டி காதலை காட்டலாம் தான் ஆனாலும் ஒரு தயக்கமிருக்கும் நிலை..வாய் வழி பேச்சுக்களை விட விழி வழி உரையாடல்கள் ஆட்சி நடத்தும் ஒருநிலை..இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அதன் அழகை..

அவள் வெளியே சென்று சில நிமிடங்களில் உணவு மேடைக்குச் சென்றவன் ஒன்றுமே அறியாதவனாய் அமர்ந்திருக்க அவளுக்குத் தான் அவனருகில் அமர பெரும்பாடாய் இருந்தது.அவனோ அவளுக்கும் தனக்குமாய் உணவை எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்திருந்தான்.

“வாவ் தோசை என்ன இவ்ளோ டேஸ்டா இருக்கு!”

“ஏன்டா வாழ்க்கைல இன்னைக்கு தான் தோசையை முதல் தடவை சாப்பிடுறியா?” என ராகவன் சிரிக்க,

“அட காரச் சட்னியா செம டேஸ்ட்”

“ஓ அப்போ இத்தனை வருஷம் என் சட்னி ரொம்ப கேவலமா இருந்துதா?”

“ம்மா பொண்டாட்டிக்கு இப்படியெல்லாம் ஐஸ் வைக்கணும் இல்லனா என் நிலைமை பாவமாய்டுமா இல்லையா?”,என அவன் சிரிக்க திஷானியோ அவனை வழக்கம் போல் முறைத்தாள்.

“ஆனாலும் நீ பொழைக்க தெரிஞ்சவன்டா மகனே..எனக்கெல்லாம் இந்த சாமர்த்தியம் இல்லாம போச்சே..”

“காலம் போன காலத்துல இப்போ உங்களுக்குஇந்த கவலை ரொம்ப தேவை தான்..”என்றவாறு சாரதா கை கழுவ எழுந்து செல்ல ராகவனும் உண்டு முடித்து எழுந்து சென்றார்.

“திஷா டியர் டிபனே அள்ளுது அப்போ லஞ்ச் என்ன ஸ்பெஷல்?”

“நீங்க நிஜமாவே பாராட்டுறீங்களா இல்ல கலாய்க்குறீங்களா?”

“அடப்பாவமே நல்லது சொன்னா கூட நம்ப மாட்டியா நீ?”

“சொல்றவிதம் அப்படியிருக்கு..”,என அவள் மெதுவாய் முனக,

“வேற மாதிரியும் சொல்லுவேன் நீ தான் என்னை முறைப்ப அதான் இப்படி சொல்றேன் ஓ.கே னா சொல்லு”,என அவள்புறம் சாய்ந்து காதருகில் கேட்க அவளுக்கோ தன்னை தானே குட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது..

“சும்மாவே ஆடுவான் இதுல நானே லீட் எடுத்து கொடுக்குறனே..கடவுளே..”,என மனதில் நினைத்தவள் ஒன்றும் கூறாமல் குனிந்து சாப்பிட சிரித்தவாறே அவன் சென்று கை கழுவச் சென்றான்.

அந்தநேரம் அவன் அலைப்பேசி டேபிளில் சிணுங்க அங்கிருந்தே அவளுக்கு குரல் கொடுத்தான்.

“யாரு திஷா கால்?”

எடுத்துப் பார்த்தவள் சாரு என்ற பெயரைப் பார்த்ததும் ஏனோ மனம் சுணங்கியது.

“சாரு கால் பண்றாங்க”

“ஓ இதோ வரேன்”,என்றவன் மொபைலை எடுத்துக் கொண்டுஅறைக்குச் சென்றுவிட அத்தனை நேரமிருந்த ரம்மிய நிலை ஏனோ சட்டென மாறிவிட்டதாய் இருந்தது திஷானிக்கு..

கிட்டதட்ட முக்கால் மணிநேரம் கழித்து வந்தவனை கண்டு கொள்ளாமல் ஹாலில் அமர்ந்து டீவி பார்பதாய் அவள் முகத்தை திருப்பிக் கொள்ள அவளருகில் அமர்ந்தவன்,

“அம்மா அப்பா எங்க?”

“கோவிலுக்கு போய்ருகாங்க உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க..”

“ஓ வாவ் என் பொண்டாட்டிய இப்படி என்கிட்ட தனியா மாட்டிவிட்டு போய்டாங்களே..சோ சேட்..”

“என்னாச்சு எதுவும் ப்ரச்சனையா?”

“யாருக்கு??”

“இல்ல உங்க ப்ரெண்டுக்கு..காலைலேயே கால் பண்ணிருக்காங்களே..”

அபினவிற்கு மனதிற்குள் உற்சாகம் தாளவில்லை..அவளின் கவிபாடும் அந்தகண்ணில் முதல்முறையாய் பொறாமை தீ சிறியதாய் தெரிகிறது..ஏனோ அதை மிகவும் ரசிக்க. தோன்ற விளையாட்டாய்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.