(Reading time: 14 - 28 minutes)

“ப்ளீஸ் தப்பா எடூத்துக்காதீங்க..என்னோட இந்த குறையை யாராவது இரக்கத்தோட பாத்துட்டு போனா எனக்கு அது ஒரு விஷயமே கிடையாது.சொல்லப் போனா அதை பொருட்டா கூட மதிக்க மாட்டேன்.ஆனா இன்னைக்கு நடந்தது சின்ன விஷயமானாலும் அவங்க கிண்டல் பண்ணது என் குறையை இல்ல மனைவியா நீங்க என்னை தேர்ந்தெடுத்தததான்..அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு..”

“இப்படி ஒவ்வொரு நாளும் நாம ஆயிரம் பேரை கடக்க வேண்டியது இருக்கும்..அது உனக்கும் தெரியும் அப்போ வாழ்க்கை மொத்தத்துக்கும் இப்படி அழுதுட்டு தான் இருக்க போறியா திஷா..”

“தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிணேன் ஒத்துக்குறேன் ஆனா நேர்ல நடக்கும் போது அதை அத்தனை ஈசியா கடந்து போக கஷ்டமா இருக்கு”,என கண்களைத் துடைத்தவள் சற்றே விலக எத்தனிக்க இன்னுமாய் தோள்பற்றி தன்புறம் சேர்த்தவன்,

“இங்க பாரு திஷா டியர் ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோ அடுத்தவங்க பார்வைக்கும் பேச்சுக்கும் வாழ ஆரம்பிச்சா நம்மளால வாழவே முடியாது..ஒருத்தரோட பார்வையும் காதில் விழாத அவர்களின் பேச்சும் உன்னை இப்படி சோதிக்குதுனா இது நல்லதானு நீயே யோசிச்சுக்கோ..எனக்கு என் மூணுகால் கருப்பழகி தான் பிடிக்கும்..என்ன பாக்குற நா வயசாகி தள்ளாடி மூணுகால்ல நடக்க போறேன் நீ கொஞ்சம் சீக்கிரமா நடக்குற அவ்ளோ தான் வித்தியாசம்..என்ன புரியுதா?”

லேசாய் முகம் இலகுத்தன்மை அடைந்திருக்க மெதுவாய் அவனிடம்,”நிஜமாவே அவங்க பேசினது உங்களுக்கு கஷ்டமாயில்லையா?”

“ம்ம் கஷ்டமாதான் இருந்துச்சு அவங்க முன்னாடி நா நினைச்சத பண்ண முடிலையேனு..”

“என்ன அது?”

“ம்ம் நீ ரொம்ப பீலிங்க்ஸ் ஆப் இன்டியாவா மாறிருந்தனா அங்கயே அவங்க முன்னாடியே நச்சென்று ஒரு இச் வைக்கலாம்னு நினைச்சேன்..சோ சேட் அது நடக்கலை..”,என்றவன் தன்னையும் மீறி சிரிக்க அவன் மார்பில் செல்லமாய் குத்தியவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

சில நிமிட அமைதிக்குப் பின் தானிருக்கும் நிலையுணர்ந்தவள் சற்றே தயக்கமாய் அவனைவிட்டு எழுந்து கொள்ள இரு கைகளையும் கட்டிலில் பின்புறமமாய் ஊன்றியவாறு அமர்ந்தவன்,

“ம்ம் இவ்ளோ நேரம் அழுகாச்சி சீன் போட்டு என் சட்டையெல்லாம் கசக்கிட்டு இப்போ மேடம் ரொம்ப டீஸண்டா எழுந்து போறத பாரு..”,என்றதை கேட்டவாறே அறை கதவை திறந்தவள் நின்று திரும்பி,

“தேங்க்ஸ் பார் எவ்ரித்திங்”,என்று புன்னகைத்தவாறே வெளியே சென்றாள்.

அதன் பின்னான நாள் மொத்தமும் ஒருவித ரம்மிய நிலையே இருவருக்கும்.அவனின் ஆதரவான அந்த அணைப்பின் கதகதப்பும் தன்னவனின் வாசனையும் நாள் முழுவதும் தன்மேல் இருப்பதாய் ஒரு பிரமை திஷானிக்கு..சாரதாவை விட்டு நகராமல் அவனை பார்ப்பதை தவிர்த்தாள்..அதை அறிந்தவனும் முகத்தில் ஒட்டிய புன்னகையோடு விழியால் அவளை மொய்த்துக் கொண்டேயிருந்தான்.

மாலை வேளையும் அவள் அப்படியே இருக்க அவளை சீண்ட எண்ணியவனாய் மொபைலை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் செல்ல அவன் எதிர்பார்த்தபடி முகம் கழுவி ரிபெரெஷ் ஆக அவள் உள்ளே வரும் அரவம் கேட்டு சாருவுக்கு அழைத்தான்.

“ஹலோ சொல்லு பக்கி “,என அவள் தூக்கத்தில் உளர

“ஹே சாரு டார்லிங் என்ன பண்ற?”

“நாசமா போறவனே நடுராத்திரில போன் பண்ணி என்ன பண்றனு கேட்டா செத்துப் போன எங்க தாத்தாவோட டூயட் பாடுறேன் வரியா?”

“ஓ வாவ் எனக்கு தெரியும் அதனால தான் கால் பண்ணேன் பாத்தியா நம்ம கெமிஸ்ட்ரிய”

“செருப்பு பிய்ய போகுது டார்லிங் கெமிஸ்ட்ரினு என்ன தண்ணி அடிச்சுருக்கியா?? என்னதான்யா வேணும் உனக்கு..”

“ம்ம் புரியுது டா செல்லம் பட் என்ன பண்றது கல்யாண வேலையே செம பிஸியா போய்டுச்சு இப்போ தான் பேச டைம்..பீல் பண்ணாத டி”

“நீயெல்லாம் பேசினாதான் பீல் பண்ணுவேன்..ஒழுங்கு மரியாதையா போனை வச்சுரு இல்ல அசிங்கமா திட்டிருவேன்..”

“ஹே நோ நோ அதெல்லாம் நாம நேர்ல பேசிக்கலாம் டா..நீ பாத்து சேஃப்பா இரு..மிஸ் யூ டார்லிங்..”

“வேணாம் புதுசா கல்யாணம் ஆய்ருக்கு சாபம் கீபம் விட்ற போறேன் போய்ரு..ரெண்டு நாளுக்கு கண்ல பட்றாத கொன்ட்ருவேன்..பே..”

அவள் பேச்சை கேட்க கேட்க இங்க சிரிப்பை அடக்க முடியாமல் வெளிக் காட்டவும் முடியால் இவன் திணர அங்கு திஷானியோ காளி அவதாரமே எடுத்திருந்தாள்.

“காலைல என்ன டயலாக் எல்லாம் விட்டுட்டு இப்போ போய் யாரோ ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி மொக்க போடுது பாரு..அந்த பொண்ணுக்காவது அறிவு வேணாம்..இப்படியா..”,எனும் போதே தன் எண்ணத்தை எண்ணி தன்னை தானே கடிந்து கொண்டாள்.

“சே நா எப்போ இப்படி ஆனேன்..முகம் பார்க்காத ஒரு பொண்ணை திட்ற அளவு..அவங்க ப்ரெண்ட்ஸ் அவங்க பேசுறதே கேட்டதே தப்பு இதுல இத்தனை கோபம் வேற வர வர எல்லாமே தப்பா இருக்கு..இந்த அபினவ் விஷயத்துல எல்லாமே தலைகீழ் பாடமா நடக்குது எனக்கு..

புருஷன்ங்கிறத மீறி கண்டிப்பா அவர் மேல ஒரு அன்பு இருக்குதான்..ஆனா அதை அவர்கிட்ட காட்டவும் தோணல தள்ளியிருக்கவும் தோணல..கடவுளே..”,என நொந்து கொண்டே எங்கோ வெறித்த மாதிரியாய் அவள் நிற்க சட்டென அவள் பின்னிருந்து காதில் லேசாய் ஊதினான்.

உணர்வு பெற்றவளோ தடுமாறி விழப் போக,”ஏய் பாத்து..”என்றவன் கையை இறுகப் பற்றி நிறுத்தினான்..

“அத்தான் பக்கத்துலயேதான் இருக்கேன் அப்பறம் ஏன் கனவுல ரொமன்ஸ் பண்ற திஷா பேபி..”,என்று கண்ணடித்து கன்னம் கிள்ளி பதிலுக்கு காத்திராமல் வெளியே ஓடிவிட்டான்.

தொடரும்...

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.