ஹ ஹ ஹ.... நான் தான் உங்க முருகன் ஜானகிம்ம்மா. உங்க புலம்பலை தினமும் கேட்டு சகிக்க முடியாமல் உங்க குறையை தீர்க்க ஓடோடி வந்திருக்கேன் “ என்று கண்களை உருட்டி கைகளை முருகனைபோல வைத்து காட்டினாள் அந்த பெண்...
“முருகா... நீயா!!! .. என் குறையை தீர்க்க நேர்லயே வந்திட்டியா!!!! ரொம்ப சந்தோஷம் பா.... ஆமாம் ... அது ஏன் பா நீ ஆணாக வராமல் பெண்ணாக வந்திருக்க??? “ என்று சிரித்தார் ஜானகி...
“அது .. வந்து... வந்து .. அவசரத்துல இந்த காஷ்ட்யூம் தான் கிடைச்சது ஜானகி...நீங்க வேற திடீர்னு மயங்கி விழ ஆரம்பிச்சுடீங்களா.... அதான் என் பக்தையை காப்பாற்ற எந்த உடையா இருந்தா என்ன இன்று இந்த பெண் உடையில் வந்திட்டேன்” என்று மீண்டும் சிரித்தாள் அந்த பெண்..
அவளின் பேச்சையும் அந்த நடிப்பையும் கண்டு விழுந்து விழுந்து சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்க ராமர் ஜானகின்னா, லவகுஷன் யாரு ?? “ என்று தன் புருவங்களை தூக்கி கேள்வியாக நடித்து காட்டினாள்..
அதை கண்டதும் ஜானகிக்கு சிரிப்பு வந்தது...
“ஹ்ம்ம்ம்ம் இப்ப புரிஞ்சிருச்சு.. லவன்... குஷன்.. ரெண்டு பேருக்கு எனக்கு பாக்கியம் இல்லை பாரதி.. லவன் மட்டும் தான்..” என்று சிரித்தார்...