எங்க ஊர்ல யாரை பார்த்தாலும் நின்னு நலம் விசாரிச்சுட்டு ஒரு ஐந்து நிமிடமாவது பேசி விட்டுதான் போவோம்.. இங்க என்னடான்னா காலுல வெண்ணியை கொட்டி கிட்ட மாதிரி பறக்குறாங்க.. கோயிலுக்கு வர்ரவங்க கூட ஏதோ பேருக்கு சாமிய பார்த்துட்டு அவசர அவசரமா கன்னத்துல போட்டுகிட்டு ஓடிடறாங்க... “
“ஹ்ம்ம்ம் இது தான் நகர வாழ்க்கை.. நீ சொல்ற மாதிரி எல்லாம உங்க ஊர்லதான் பார்க்க முடியும்.. ஆமா உங்க ஊர் எப்படி இருக்கும்”
அவ்வளவுதான்... இந்த சென்னைக்கு வந்து கடந்த ரெண்டு நாளாக யாரிடமும் பேச முடியாமல் ஏதொ கட்டி போட்ட மாதிரி இருந்த பாரதிக்கு தன் பேச்சை கேட்க ஆள் கிடைக்கவும் தன் கிராமத்தை பற்றி பெருமையாக பேச ஆராம்பித்தாள்...
“எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் னு மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>Episode # 07
{kunena_discuss:1194}