“இல்லையே.. நம்ம இதிகாசம் தப்பாகாதே!! “ என்று தன் ஆட்காட்டி விரலை கன்னத்தில் வைத்து யோசித்தவள்
“அப்படீனா உங்க லவனே குஷனாகவும் இருந்து உங்களை பார்த்துக்கறார் தானே... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பையனா உங்களுக்கு பிறந்திருப்பாங்க... அது தான் சரியா இருக்கும்...இல்லைனா எங்க ஆயா சொன்ன கதை தப்பாயிடும் ” என்று சிரித்தாள்
அதை கண்டதும் ஜானகியும் வயிறு குழுங்க சிரித்தார்..
“வாயாடி...என் பையனையா கிண்டல் பன்ற..அவனை மட்டும் பார்த்த நீ மயங்கி போய்டுவ!! அவன் ராஜகுமாரனாக்கும்” என்று தன் பையனை பற்றி சொல்லையில் அவர் கண்கள் மிலிர்ந்தது...
“ஷ் அப்பா.. இந்த அம்மாங்களுக்கு எல்லாம் தன் பையன் எப்பவும் ராஜ குமாரன் தான்” என்று இடித்து காட்டினாள்..
அவளின் அந்த கிராமத்து வெகுளியை ரசித்தவர் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம்ம் நான் நல்லா பேசறெனு நீங்க சொல்றீங்க... எங்க ஊர்ல என்னை வாயாடினு தான் எல்லாரும் சொல்லுவாங்க..
ஆமாம்... இந்த ஊர்ல ஏன் எல்லாரும் சிரிக்கவே கூலி கேட்கறாங்க ஜானகிம்மா... நாம சிரிச்சா கூட ஒரு வித்தியாசமா பார்க்கறாங்க.. யாரும் யார் கூடயும் நின்னு ஒரு நிமிடம் கூட பேச மாட்டேங்குறாங்க..