(Reading time: 20 - 40 minutes)

"இன்னும் சில நாழிகையில் பொழுது விடியப்போகிறது. விசாரணை முடிந்ததும், உங்களுக்கு அரண்மனையில் விருந்து ஏற்பாடு செய்யப் போகிறேன். கலந்து கொள்ள உனக்குச் சம்மதமா?"

"என்ன இளவரசே! இப்படிக் கேட்கிறீர்கள்? சம்யுக்தனுடன் சேர்ந்ததிலிருந்து உணவைப் பார்த்தே வெகுநாட்களாகி விட்டது. என் வயிறு வாடி வதங்கி தினமும் என்னைச் சோதனை செய்கிறது. அறுசுவை உணவு வகைகளும் முக்கனிகளும் இப்பொழுதே என் கண்முன்னால் காட்சியளிக்கின்றன" என்று சம்யுக்தனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதைக் கேட்ட இளவரசன் சிரித்தான்.

அப்போது, "நானும் தானே விருந்தில் கலந்துகொள்ளப்போகிறேன்" என்று பூபதி அவர்கள் இருவருக்கும் இடையே தன் தலையை நீட்டினான்.

இளவரசன் பூபதியைப் பார்த்துத் திடுக்கிட்டு, "யாரிவன்? பகைவனா? ஒட்டுக்கேட்கிறான்" என்றான்.

அதைக் கேட்ட பூபதி அலறிவிட்டான். "இளவரசே! அன்று என் குதிரையைக் காணோம் என்று அரண்மனைக்கு வந்தேனே?"

இளவரசன் திடீர் ஞாபகம் வந்தவனாய், "ஓ...ஞாபகம் இருக்கிறது. நீ எப்படி இங்கே?" என்று கேட்டான்.

"என்ன இளவரசே இப்படிக் கேட்டுவிட்டீர்கள். இவர்களுடன் இணைந்து நானும் தானே வீர தீர சாகசம் புரிந்தேன்".

"பகைவர்களிடம் உதை வாங்கியதைச் சொல்கிறான், இளவரசே!" என்று பார்த்திபன் கூறினான்.

பூபதி பார்த்திபனை முறைத்தான். இளவரசனும் சம்யுக்தனும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அனைவரும் அரண்மனையை நோக்கிக் கிளம்பினார்கள். 

சாம்ராட் சம்யுக்தனின் இரண்டாம் பாகம்....விரைவில்  

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 13

பாகம் - 01 - அத்தியாயம் 15

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.