(Reading time: 21 - 41 minutes)

அவள் அவ்வாறு கூறியதும், ஏய் கிழவி யாரை பார்த்து வயசாகிடுச்சுன்னு சொல்ற என் அப்பாவை பார்த்தா உனக்கு வயசானவர் மாதிரியா தெரியுது? தலையில் கொஞ்சம் நரை முடி இருக்கிறத பார்த்துட்டு என் அப்பாவ வயசானவர்னு நீ எப்படி முடிவெடுக்கலாம். அது இளநரை என்று தன பாட்டியுடன் மல்லுக்கு நின்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் அவ்வாறு சொன்னதும், வாடி என் சீம சித்ராங்கி, உன் அப்பனுக்கு இப்பத்தான் இளமை திரும்புது நீ ஒருவயசு பாப்பா அதனால உன்னை தூக்கிட்டு சுத்தசொல்லுவ. என் மகனை உன் கொடுமையில் இருந்து காப்பாத்த நான் பேசுனா என்னையே என் புள்ளைக்கு எதிரா பேசுனதா திருப்பி விடுற.

ஆமா! நான் தெரியாமத்தான் கேட்கிறேன். உனக்கு உண்மையாவே கால் வலியா? அல்லது தனியா போறதுக்கு பயந்துகிட்டு அவன உனக்கு துணையா கூப்பிடுறையா? இத்தன நாளா தனியா போன பாதையில இப்பமட்டும் போறதுக்கு என்ன பயம் உனக்கு.... எதுனாலும் உண்மைய சொல்லுபாப்பா நானும் இரண்டுநாளா உன்னை பார்த்துக்கிட்டுதான் இருக்கிறேன், ஏதோ அரண்ட மாதிரி தெரியிற என்று கேட்டாள் ருக்மணி பாட்டி .

அவர் அவ்வாறு கேட்டதும் நான் எதுக்கோ பயந்து, அப்பாவ என் கூட கூப்பிட்டுபோறேனு இந்த ருக்கு மோப்பம் புடிச்சுடுச்சே!

பாட்டிக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது நம்மை இனி காலேஜுக்கு போக விடாது என்ன செய்யலாம் என யோசித்தாள்!

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.