அப்பொழுது மிதுனனின் மொபைல் தொடர்ந்து வயாபரேட் ஆவதை கண்டு யார் என்பதை காண சற்று ஓரமாக சென்று பார்த்தான்.
அதில் சத்தியமூர்த்தி பெரியப்பா என்று வந்ததும் முக்கியமான விசயமாக இருந்தால் மட்டுமே கல்லூரியில் இருக்கும் இந்த நேரத்தில் தன்னை தொடர்பு கொள்வார் என்ன விசயமாக இருக்கும்! என்ற யோசனையுடனேயே அதை இயக்கி காதிற்கு கொடுத்தான்.
“மிதுனா வகுப்பிலேயா இருக்க உன்னிடம் முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று அவர் கூறியதும்
இல்ல பெரியப்பா, இன்று கிளாஸ் எதுவும் நடக்காது நான் நாளை நடக்கும் ஆடிடோரியம் ஓபனிங் பங்சன் அரேஞ்மெண்டில் இருக்கிறேன். சொல்லுங்க... எதுவும் முக்கியமான விசயம் என்றால்தான் நீங்க இந்த நேரத்தில் கால் பண்ணுவீங்க .முதலில் விஷயத்தை சொலுங்க என்றான்.
மிதுனா நான் இப்போ வானவராயர் அய்யாகூட இருக்கிறேன். சி என் ஜி நிறுவனம் வேகமாக சுத்தியுள்ள எட்டு ஊரு நிலத்தை கையகப்படுத்த முயல்கிறது.
நாம், மக்களை அவர்களுக்கு எதிராக களமிறக்கினால் மட்டுமே இதை முளையிலேயே தடுக்க முடியும். எனவே இன்னும் இரு நாட்களில் ஊரில் பெரிய ஆரபாட்டம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வினை உண்டு செய்து நிலத்தை சி என்.ஜி க்கு கொடுப்பதை தடுக்க வேண்டும் .
எனவே நீ என்ன செய்றனா...! உன் பங்கிற்கு, மாணவர் படையில் சி என் ஜி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தினால் விளையும் பாதகங்களை எடுத்துகூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க உன் சைடில் இருந்து ஆட்களை திரட்டு.
கூட்டம் நடப்பதற்கு இடையில் இரண்டு நாட்கள் இருப்பதினாலேயே இப்பொழுதே உன்னிடம் கூறவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் நீ வகுப்பில் இருக்கும் நேரம் என்றாலும் கூட பரவாயில்லை என்று உன்னை தொந்தரவு செய்துவிட்டேன் என்றார்.
அவர் கூறிய விவரத்தை கேட்ட மிதுனனுக்கு பரபரப்பு தொற்றிகொண்டது. இபொழுதே கல்லூரி ப்ரோகிராம் அரேஜ்மென்டுடன் தனது தோழர்களை திரட்டும் பணியில் ஈடுபட முடிவெடுத்தான் .
இந்த பரபரப்பில் அவன் யாழிசையிடம், அவன் அவளை விரும்பும் விசயத்தையும். சந்தியாவிடம்… தான் அவளிடம் நட்பு மட்டுமே நாடுவதாக இருவரையும் ஒருங்கே நிறுத்தி விளக்கிக் கூறவேண்டும் இதனால் சந்தியா யாழிசைக்கு இடையிலான நட்பில் விரிசல் விழாமலும் பக்குவமாக பேசவேண்டும். மேலும் யாழிசையிடம் தனது விருப்பத்தை கூறி அவளின் பதில் எதுவாக இருந்தாலும் அதை ஏற்பதாகவும் பேசவேண்டும் என்று நினைத்திருந்தது எல்லாம் மறந்துவிட்டது.
இப்பொழுது அவனின் எண்ணம் முழுவதுவும் தனது தாய் பூமி பாதுகாக்கப்படவேண்டும் அதற்கு என்ன செய்யலாம்? என்ற எண்ணமே மேலோங்கி அதன் அடிப்படையிலே செயல்பட ஆரம்பித்தான் மிதுனன்.
கல்லூரியில் மதியம் லஞ்ச் டைமில் மிதுனன் தனது தோழர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்தான்.
இன்று மாலை ப்ரோகிராம் ரிகர்சல் முடிந்ததும் முடிந்த அளவு ஸ்டூடன்ஸ் யாரும் வீட்டிற்கு போகாமல் கல்லூரியிலேயே தங்க வைக்க கூறிக்கொண்டிருந்தான்
நாளை நடக்கவிருக்கும் ஸ்டேடியம் ஓபனிங் பங்சன் விழாவிற்கு வரும் ரங்கராஜனிடம்... அவரும், அவரின் கட்சியும் ஆதரவு அளித்துவரும் சி.என்.ஜி நிறுவனத்தின் திட்டத்தால் வரும் தீமைகளை பட்டியலிட்டு அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் தடுக்க ஸ்டூடன்ஸ் அனைவரும் சேர்ந்து தயாரித்த பெட்டிசன் ஒன்றை அவரிடம் கொடுத்து அவரின் கட்சி மேலிடத்தில் கொடுக்க சொல்லவேண்டும் .
அதைப் பற்றிய விழிப்புணர்வை இன்று இங்கு தங்கும் ஸ்டூடன்ஸ் எல்லோரையும் லாபிக்கு பின்னால் இருக்கும் இடத்தில் ரகசியமாக கூட்டி ஒரு விழிப்புணர்வு ஸ்பீச் கொடுத்து அவர்களின் கையெழுத்தையும் அந்த பெட்டிசனில் வாங்கவேண்டும் என்று கூறினான்.
அதன்படி அன்று இரவு ரிகர்சல் முடிய ஏழுமணி ஆகியிருந்த நேரத்தில் ஸ்டூடன்ஸ் மத்தியில் சற்று சலசலப்பு உண்டானது.
அதில் சிலர் தங்களின் தோழிகளை ஏய் சீனியர்ஸ் எல்லோரும் நைட் இங்கு ஸ்டே செய்துவிட்டு மார்னிங் வீட்டிற்கு போகலாம் என்று பிளான் போட்டிருகிரார்கள்.
ஏய்.! நாமளும் இந்த ப்ரோகிராமை சாக்காக சவைத்து டுடே நைட் இங்க ஸ்டேபண்ணி ஜாலியா என்ஜாய் செய்யலாம் என்றனர்.
சந்தியா யாழியிடம் . யாழி ப்ளீஸ் டீ நீயும் நானும் இன்று இங்கு தங்குவோமே... இன்னைக்கு நம்ம காலேஜ் ஹீரோவான மிதுனனிடம் நான் எப்படியாவது என் மனதில் இருக்கும் லவ்வை சொல்லிடனும் என்று நினைக்கிறேன்.
நீ என்னுடன் இருந்தால் எனக்கு கொஞ்சம் தெம்பாக இருக்கும் நாளைக்கு உன்னை மார்னிங் சிக்ஸ் ஓ கிலாகிற்கு உன் வீட்டில் டிராப்பன்றது என் பொறுப்பு ப்ளீஸ்.....யாழி, என் செல்லமில்ல... சரின்னு சொல்லுடி, என்று கூறினாள்.