வள்ளி அமைதியாக படுத்திருப்பதை பார்த்து பாட்டி உங்களுக்கு என் மேல்தான் கோபமா நீங்கள் தினமும் சொல்லியிருக்கிறீர்கள் விளையாடும் போது ரோது பத்தம் போத கூதாதுனு.என்னால்தான் உங்களுக்கு அதிபத்துவித்தது இனி அப்பதி செய்யமாத்தேன் என்று தன் காதுகளில் கை வைத்து தன் மழலை மொழியில் அபி பேச அவன் பேசுவதை கேட்ட கீதாவும் அழுகையை கட்டுபடுத்தமுடியாமல் அழ வள்ளி கை அசைய ஆரம்பித்தது அறை விழி திறந்து பார்த்தவர் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தார்.
வள்ளி கண் திறந்த செய்தியை நர்ஸ் சென்று டாக்டரிடம் கூற அவருக்கான சிகிச்சை தீவிரமாக்கபட்டது.ஒருவழியாக அனைவரையும் பயபடுத்தி ஆபத்து கட்டத்தை கடந்தார் வள்ளி.
ராகவ் மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது வள்ளியும் கண் திறந்திருந்தார்.அனைவரும் மீண்டும் ஒருமுறை வள்ளியை பார்த்து வர கடைசியாக ராகவ் சென்றார்.அவரிடம் டாக்டர்கள் வள்ளி ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டார் என்றும் இன்னும் ஒரு ஆப்ரேஷன் மட்டும் செய்துவிட்டால் எந்த பயமும் இல்லை அதனால் தைரியமாக பேசுங்கள் என்று சொல்லி அனுப்பினர். ராகவ் வள்ளியை பார்த்து பயமுருத்திவிட்டாய் கண்ணம்மா என்று அழுதவர் தன்னை சமாளித்து கொண்டு இன்னும் ஒரு ஆப்ரேஷன் மட்டும் செய்தால் போதுமாம் என்று சொன்னவரை பார்த்த வள்ளி தன் மனதில் இருப்பதை சொல்லி முடித்தால்.
வள்ளியிடம் பேசிவிட்டு வெளியில் வந்தவரிடம் கீதா என்னப்பா அம்மா என்ன சொன்னார்கள் என்று விசாரிக்க. அவளை இயலாமையோடு பார்த்தார் ராகவ்.என்னப்பா என்று கேட்ட மகளிடம் உங்கள் இருவரின் திருமணம்தான் அவளின் ஆசை என்று கூறி சுவாதி,கீதா இருவர் முகங்களையும் பார்த்தார்.
உங்கள் திருமணத்தை பார்த்தால்தான் ஆப்ரேஷனுக்கு ஒத்துகொள்வாளாம்.
இருவரும் அதிர்ச்சியுடன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவர் அவள் விருப்பத்தை நான் சொல்லிவிட்டேன்.இனி முடிவு உங்கள் கையில் என்று கூறி அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டார்.
கீதாவின் முகத்தை பார்த்த சுவாதிக்கு கோபம் ஏற அவளது கையை பிடித்து இழுத்து போய் ராகவிற்க்கு எதிரில் நிறுத்தியவள் அப்பா கீதா ஒருவரை காதலிக்கிறாள்.சற்று முன்பு உங்களுடன் பேசி கொண்டிருந்தாரே அவர்தான்.எனக்கு நேற்று தான் விஷயம் தெரியும் அதை பற்றி விசாரிக்க தான் நேற்று பார்க்குக்கு போனது அதை கேட்பதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது என்றாள்.
ராகவ் எதுவும் சொல்லாமல் மகளை பார்க்க கீதா என்ன சொல்வது என்று பார்த்து கொண்டிருக்கும் போது நகுலன் அபியை தூக்கி கொண்டு அங்கு வந்தான்.இவர்களின் பேச்சு காதில் விழுந்தது போல் அவன் கீதாவை கூர்மையாக பார்த்தான். அழுது அழுது சிவந்திருந்த கண்களுடனும் தலையெல்லாம் கலைந்து பார்க்கவே பாவமாக இருந்தவளை பார்த்தவன் இவள் இப்போதைக்கு பேசும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து தானே பேச ஆரம்பித்தான்.
அ....என்று ஆரம்பித்து அண்ணி என்று சொல்ல வந்தவன் அவர்கள் என்று மாற்றி அவர்கள் சொன்னது உண்மை தான் சார் ஆனால் எங்கள் திருமணத்தில் ஒரு சிக்கல் உள்ளது.
என்ன சிக்கல் என்று இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கேட்டு அவன் முகம் பார்த்தனர்.
என் அண்ணன் திருமணம் முடிந்த பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்றான்.நாளை என் பெற்றோரை வர சொல்கிறேன் நீங்களே அவர்களிடம் பேசுங்கள் என்று கூறினான்.
தன்னுடைய வாழ்வு தனக்கு சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ நடக்கிறது என்று எண்ணிய கீதா ஒரு வெற்று பார்வையை நகுலனை நோக்கி பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்.
நகுலன்தான் அவள் பார்வையில் அடிவாங்கினான் ஏன்டி இப்படி பார்க்கிறாய்.உன் விருப்பப்படிதானே எல்லாம் நடக்கிறது.பிறகு எதற்கு வாழ்க்கையே முடிந்தது போல் இப்படி பார்க்கிறாய். இன்று உனக்கு ஒரு வாக்கு அழிக்கிறேன் உன் விருப்பப்படி தான் எல்லாம் இருக்கும் எந்த காரணத்திற்க்காகவும் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் என்று மனதினுள் பேசி கொண்டான்.
மறுநாள் நகுலனின் குடும்பம் முழுதும் ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.ஐசியூ வாசலிலேயே அமர்ந்திருந்த ராகவை பார்த்த நகுலனின் அம்மா சுந்தரி அதிர்ந்து போய் அங்கேயே நிற்க மற்ற அனைவரும் ராகவை நெருங்கினர்.
சார் என்று அழைத்து இது என்னுடைய அண்ணன் அர்ஜூன்,என் அப்பா வரதராஜ்,இது தங்கை மதிமலர் என்றவன் திரும்பி அம்மாவை பார்க்க அவர் உள்ளே வந்த இடத்திலேயே நிற்கவும் அவரிடம் சென்று அம்மா என்று தோளை தொட்டு உளுக்க நினைவுலகத்துக்கு வந்தவர் கண்களில் கண்ணீருடன் வேகமாக ராகவை நோக்கி சென்று அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று காலில் விழுந்தார்.
அனைவரும் திகைத்து நிற்க அம்மா சுந்தரி என்று ராகவும் திகைத்து,கண்ணீருடன் எழுந்திருமா எதற்கு காலில் எல்லாம் விழுந்து கொண்டிருக்கிறாய் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்றார்.ஆம் சுந்தரி ராவநின் பெரியப்பா மகள் தனக்கு தங்கை இல்லை என்ற குறையால் ராகவ் எப்போதும் சுந்தரி மேல் தனி பிரியம் வைத்திருந்தார்.