“என்கிட்டே ஏன் மறைக்கிறே? அப்பாக்கிட்ட பேசிட்டு வரும்போதே நீ கவலையோடு வந்ததை நான் பார்த்தேன். இந்தா பிடி.”
அவன் கையைப் பார்த்த சரவணன் திகைத்தான்.
பணம்.
“ஏதுண்ணா? எதுக்குண்ணா என்கிட்ட தர்றே?”
“உனக்கும், பிரபாவுக்கும் தந்த மாதிரி அப்பா எனக்கும் தந்தார். நான் என்ன இப்ப வீடா கட்டப் போறேன்? நீ வாங்கிக்கோ. உன்கிட்ட வேற பணம் இல்லைன்னு எனக்குத் தெரியும்.”
“இல்லைண்ணா. பரவாயில்லை. இது உனக்குன்னு அப்பா தந்தது.”
“ஏன்டா அப்பா கொடுத்தால் வாங்குவே. ஆனால் இந்த அண்ணன் கொடுத்தால் வாங்கிக்க மாட்டியா?”
சற்றே கோபமுடன் கேட்டான்.
“அப்படியில்லைண்ணா.”
“இந்த வீட்டோட பொறுப்பையும், அப்பாம்மாவையும் நீ பார்த்துக்கிட்டதால்தான் என்னால் நிம்மதியா என் தொழிலைப் பார்க்க முடிந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கொள்ள ஆளில்லாமல் தவித்தான்.
அப்போது அவனது மூத்த சகோதரி அவனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாள்.
அவன் இனி மேல் தனக்குத் திருமணம் தேவையா என்று மறுத்துவிட்டான்.
ஆனால் அவனது அன்னையைக் காரணம் காட்டி அவனை மணம் புரியச் சொன்னார்கள்.
அவனது தாயும் அதையே கூறினாள்.