"ஹூம் போதும் சமாலிக்காதிங்க. சரி என்ன கேட்டீங்க"
"கௌவுதம் எங்க இருக்கான்னு கேட்டேன் நிலா அவன் போனும் எடுக்கல"
"கௌவுதம் லண்டன் போயிருக்கார் அண்ணா. வேற போன் யூஸ் பண்றார்"
"ஓஓ.. எப்ப போனான். என்ன விசயமா போயிருக்கான்"
"ரெண்டு நாள் ஆச்சு அண்ணா பிசினஸ் விசயமா போயிருக்கார். ரொம்ப முக்கியமான டீல்னு சொன்னார்"
"திரும்பி எப்ப வருவான்."
"அது தெரியல அண்ணா வர பத்து நாள் ஆகும்னு சொன்னார். இன்னைக்கு நயிட் போன் பண்றேன்னு சொன்னார். அவர் போன் பண்ணும்போது கேட்டு சொல்லட்டுமா"
"ம்ம்...கேளு நிலா. ஆனா மித்ராவுக்கு கல்யாணம்னு சொல்லாத ரொம்ப முக்கியமான டீல்னு வேற சொல்ற மித்ராவுக்கு கல்யாணம்னு சொன்னதும் அத நிப்பாட்றேன்னு டீல டீல்ல விட்டுட்டு இங்க வந்துடப்போறான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கமான விசயங்களைப் பற்றி பேசிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
பின்பு பிரணவ்விற்கு போன் பண்ணி கௌவுதம் வரும் தேதியைக் கூறினாள். பிரணவ்வும் சரி அப்போ கௌவுதமிடம் கூறவேண்டாம் அவன் திரும்பி வந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றான். வெண்ணிலாவிற்கும் அது சரி என்று தோன்றியதால் அவளும் சரி என்றாள்.