பிரணவ்வின் பக்கத்திலிருந்து நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா "பிரணவ் அண்ணா போதும் பாத்தது. நீங்க ஊத்துற ஊத்துல ரிஜிஸ்டர் ஆபீஸே நனஞ்சிருச்சு பாருங்க" என்று பிரணவ்வை கிண்டலடித்தாள்.
"அப்படி சொல்லுங்க நிலா. இங்க மித்ராவைப் பாருங்களேன். காலாலையே தரையத்தோண்டி தண்ணீ வரவச்சுருவா போல" என்று அனிதா மித்ராவைக் கிண்டிலடித்தாள்.
"ஹேய் வாலுங்களா ரெண்டுபேரும் கூட்டு சேந்துகிட்டு என் பையனையும் பொண்ணையும் கிண்டலடிக்கிறீங்களா. இப்ப நீங்க ரெண்டுபேரும் வாயமூடல..."
"மூடலனா" என்றனர் இருவரும் ஒருசேர கோரஸாக.
"இங்கயே ரெண்டு மாப்பிள்ளையப் பாத்து உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தப் பண்ணி வச்சிடுவேன்"
"கல்யாணமா" என்று அதிர்ந்த இருவரும் "அச்சச்சோ நாங்க உங்க பசங்கள எதுவும் சொல்லலப்
...
This story is now available on Chillzee KiMo.
...
் வரிசையில் வந்து மணமக்களை வாழ்த்தி பரிசுகள் கொடுத்தனர். வெண்ணிலா இருவருக்கும் மோதிரம் பரிசலித்தாள். இதெல்லாம் எதற்கு என்று கேட்ட பிரணவ்விடம் "தங்கச்சி குடுத்தா அண்ணன் ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கக்கூடாது சரியா. எங்க ரெண்டுபேரும் இப்பவே இந்த மோதிரத்த மாத்திக்கோங்க பாப்போம்" என்றாள்.