"ஏது ரூம் டெக்ரேசன் இல்லாம இருந்சுச்சா" என்ற பிரணவ் பால்கனிக்கு அருகிலிருந்த ஸ்கிரீனை விலக்கிக் காட்டினான். அங்கே இரண்டு மூங்கில் கூடைகள் நிறைய பூக்கள் இருந்தது.
"இது என்ன பிரணவ்"
"இந்த ரூம அலங்கரிக்க பயன்படுத்தின பூக்கள்தான் மித்ரா. நீ வர்றதுக்குள்ள எல்லா அலங்காரத்தையும் கலச்சு எடுத்து வச்சிருக்கேன்"
பிரணவ் சொல்வதைக் கேட்ட மித்ரா மறுபடியும் அந்த கூடைகளைப் பார்த்தாள். எப்படியும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து அலங்காரம் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் பிரணவ் ஒருவரே எடுத்து வைத்திருக்கிறார் என்றால் எவ்வளவு கஸ்டமாய் இருந்திருக்கும் என்று மித்ராவிற்கு புரிந்தது.
"எதுக்காக பிரணவ் இவ்வளவு கஸ்டப்பட்டு கிலீன் பண்ணியிருக்கீங்க"
"நீ அலங்காரம் இல்லாம பாக்குறதுக்கு நிம்மதியா இருக்குன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் அனிதா.
"ஆமா மித்ராக்கா நீங்க எப்போ ப்ரீயா இருக்கீங்கன்னு சொல்லுங்க அடுத்த நிமிசமே உங்கள டிஸ்டப் பண்ண நாங்க ரெண்டு பேரும் உங்க பக்கத்துல இருப்போம் சரியா" என்றாள் வெண்ணிலா.
இருவரும் அடிக்கடி வீட்டிற்கு வரவேண்டும் என்ற கார்த்திகாவின் அன்புக்கட்டளையுடன் வீடு திரும்பினர்.