பின்பு பிரணவ்விற்கு பட்டு வேட்டி சட்டையும் கூடவே அனிதாவிற்கும் வெண்ணிலாவிற்கும் உடைகள் எடுத்தனர். பிரணவ் வெண்ணிலாவை திருமணத்திற்கு அழைத்திருப்பதை கார்த்திகாவிடம் கூறியிருந்தான். அவருக்கும் வெண்ணிலாவை மிகவும் பிடிக்கும் என்பதால் கார்த்திகாவும் தன் பங்கிற்கு அவளுக்கு போன் செய்து திருமணத்திற்கு வரும்படி அழைத்திருந்தார் மேலும் பிரணவ் நேரில் வந்து பத்திரிக்கை வைப்பான் என்றும் கூறினார். அவள் பரவாயில்லை தானே வந்துவிடுவதாக கூறியும் பிரணவ் கௌவுமின் பங்களாவிற்கு வந்து பத்திரிக்கை வைத்திருந்தான். அதனால் அவளுக்கும் சேர்த்தே உடைகள் எடுத்தனர்.
கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்புவரை மித்ரா ஹாஸ்பிடலுக்கு சென்றுகொண்டிருந்தாள். கல்யாணத்தையொட்டி பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாள். மித்ரா ஹாஸ்டலில் இருக்கும் கடைசி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
மித்ராவிற்கு இந்த புடவை மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று கூறினர். பிரணவ் என்ன கூறுவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மித்ரா அவன் ஒன்றும் பேசாமல் இருக்கவும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் கண்களைப் பார்த்தவளுக்கு வார்த்தைகள் தேவையிருக்கவில்லை. கண்ணங்கள் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள்.