சிறிது நேரத்தில் கண் விழித்தவர் அயர்வாய் அவர்களை நோக்கி பார்வையை சுழற்றினார்.அவரருகே ஓடியவள் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டாள்.
“இப்போ எப்படிபா இருக்கீங்க?”
நலம் என்பதாய் தலையசைத்தவர் கண்களால் வாயிலை தழுவ அங்கு யாரும் இல்லையென்பதை உணர்ந்து மெதுவாய் “ஆ..த்…வி…க்..”என்றார் மகளிடம்.
“ப்பா அவரு சொன்னதெல்லாம் மைண்ட் எடுத்துக்காதீங்க..அவரு ஏதோ உளறார்.நான் உங்க பொண்ணுப்பா உங்களை மீறி எதுவும் செய்வேனா…என்னை நம்புங்கப்பா..”,என மூச்சுவிடாமல் அவள் பேசி முடிக்க ராஜசேகரின் புருவங்கள் குழப்பத்தில் நெளிந்தன.
“ஆத்விக்கை உனக்கு முன்னாடியே தெரியுமா?”
“??!””
“சொல்லு ஷான்யா?”
“அவர் தான் பா எங்க எம் டி…உங்களுக்கு அவரைத் தெரியுமா பா?”
“ஓ!!”
என்றவர் அதன்பின் ஒன்றும் கூறாமல் விழி மூடிக் கொண்டார்.இந்த விஷயத்தை இத்தனை நாட்களில் அவன் ஏன் கூறவில்லை என்று குழம்பினார்.அவனைப் பார்க்க வேண்டும் என்று மகளிடம் கூற அவள் அழைத்த நேரம் மொபைல் சைண்ட் மோடில் இருந்ததால் ஜீவிகாவோ ஜெயந்தோ கவனிக்கவில்லை.
இப்போது அவர்கள் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய சிந்தனையே அவள் மனதை ஆக்கிரமித்திருந்தது.அதே நேரம் ஜீவிகாவும் ஆத்விக்கும் காரிலிருந்து இறங்கி நடந்து வர அவளைக் கண்டதும் ஜீவிகா அவளை நோக்கி நடக்க எத்தனிக்க ஆத்விக் நேராக உள்ளே சென்றுவிட்டான்.
“எப்படியிருக்கீங்க ஷான்யா?அப்பா எப்படியிருக்கார் டாக்டர் என்ன சொன்னாங்க?”
“பயப்படுற அளவு ஒண்ணுமில்ல இப்போ நல்லாயிருக்கார்..ஐ அம் சாரி..”
“எதுக்கு??”
“இல்ல நேத்து ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டேன் அதான்..”
“தட்ஸ் ஓகே..ஃப்ரீயா விடுங்க உங்க பாஸ் தான் செம மூட் அவுட்ல இருக்காங்க வாங்க உள்ளே போலாம்..”,என்று இலகுவாய் பேச்சை முடித்துக் கொண்டு அவளையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.
அங்கு ஹாலில் சாய்வு நாற்காலியில் ராஜசேகர் அமர்ந்திருக்க அருகிலிருந்த சேரில் ஆத்விக் அமர்ந்திருந்தான்.ஜீவிகாவை கண்டவரின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.
“ஹாய் அங்கிள் என்ன இப்படி பயமுறுத்தீட்டீங்க..என் பேச்சு அவ்ளோ கொடுமையாவா இருந்தது பொசுக்குனு மயங்கிட்டீங்களே?”
“என் தப்பையெல்லாம் எனக்கு புரிய வச்ச இல்லமா அதான் மயக்கம் வந்திருக்கும்..”
“சரி இப்போ எதுக்கு இந்த பேச்சு…இப்போ எப்படியிருக்கீங்க..எழுந்ததும் எங்களைத் தான் தேடினீங்களாம்..நா கூட நினைச்சேன் நேத்து நாம பேசுன பேச்சுக்கு கட்டையை எடுத்து அடி வெளுக்க போறாருனு..பரவால்ல நீங்க கொஞ்சம் குட் அங்கிள் தான்..”
“ஜி கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா..அவரை பேச விடு..”
“அதுவும் கரெக்ட் தான்..சரி சொல்லுங்க என்னனு கேட்போம்..”
“என் பொண்ணை உனக்கு முன்னாடியே தெரியுமா ஆத்விக்?”
“ம்ம் தெரியும் அங்கிள்.”
“ஏன் அவ உன் ஆபீஸ்ல தான் வேலை பார்க்குறானு சொல்லவே இல்ல?”
“அதுக்கும் முன்னாடியே அவளை எனக்குத் தெரியும் என் காலேஜ் ஜுனியர் அவ..”,ஆத்விக்கும் ஜீவிகாவும் ஓரளவு அவரின் மனவோட்டத்தை யூகித்திருந்ததால் இதற்கு மேல் எதையும் மறைக்க வேண்டாம் என்பதாய் அர்த்தப் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
“நீங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறீங்களா?”
“அப்பா!!!”
“நான் உங்க பொண்ணை விரும்புறேன் அங்கிள்..ஆனா அவ முடியாதுனு சொல்லிட்டா..”
“அப்பறம் ஏன் என்னோட பழகி என்னை ஏமாத்திட்டு இருந்த?”
“அங்கிள் ப்ளீஸ்.உண்மையை மறைச்சு தான் உங்களோட பேச ஆரம்பிச்சேன்.ஆனா உங்களை ஏமாத்தணும்ங்கிறதுக்காக இல்ல..எப்படியாவது உங்களுக்கு பிடிச்ச மாதிரியான ஒருத்தனா இருக்கணும்னு தான்.என் மேல நம்பிக்கை வந்த அப்பறம் விஷயத்தை உங்ககிட்ட சொன்னா புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன்..நீங்க சொன்னா மட்டும் தான் இந்த ஜென்மத்துல ஷான்யா என் காதலை ஏத்துப்பா..எனக்கு வேற வழி தெரில அங்கிள் ஐ அம் சாரி..”
“இப்போவும் நான் உன் காதலுக்கு சம்மதம் சொல்லுவனு நினைக்குறியா?”
“இப்போ ஒரு துளி கூட அந்த நினைப்போட நான் இங்க வரல..நேத்து உங்களை அந்த நிலைமையில பார்த்ததும் ரொம்பவே பயந்துட்டேன் அங்கிள்.என்னால தான் இப்படி ஆய்டுச்சோனு கூட யோசிச்சுட்டேன்.உங்ககிட்ட என்னை அறிமுக படுத்தினதுல வேணா நேர்மை இல்லாம இருக்கலாம்.
ஆனா இத்தனை நாள் நான் உங்ககிட்ட பழகினதுல நிச்சயம் எந்த பொய்யும்